விவசாயிகளின் பிரச்சனைகளுக்காக வலு வாக வாதிடும் ஒரு டிஜிட்டல் மீடியா தளமான காவ்ன் சவேராவின் முகநூல் மற்றும் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதற்கு பத்திரிகை யாளர்களும் பத்திரிகையாளர் சங்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன. இளம் பத்திரிகை யாளர் மன்தீப் புனியா தலைமையிலான காவ்ன் சவேரா டிஜிட்டல் ஊடகம் தில்லி எல்லையில் விவசாயிகள் நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தை விரிவாக வெளியிட்ட டிஜிட்டல் ஊடகங்களில் ஒன்றாகும். இதுபோல பாஜக ஆட்சியில் நாட்டின் பல்வேறு பகுதிக ளில் ஊடகங்கள் நசுக்கப்படுகின்றன.
ஒன்றிய பாஜக அரசின் விவசாயிகள் விரோத கொள்கைகளுக்கு எதிராக ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வரு கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு செய்திகளை, கட்டுரைகளை காவ்ன் சவேரா ஊடகம் வெளியிட்டு வந்தது. ஆகஸ்ட் 24 அன்று தலைநகர் தில்லியில் நடைபெற்ற தொழிலாளர் கள் மற்றும் விவசாயிகளின் தேசிய மாநாட்டிற் கான முன்னேற்பாடுகள் குறித்தும் இந்த ஊட கத்தில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. இத்தகைய செய்திகளை விவசாயிகள் மற்றவர்க ளுக்கு வாட்ஸ்அப் மற்றும் இதர சமூக ஊட கங்கள் வாயிலாக பகிர்ந்து வருகிறார்கள். இத்த கைய நடவடிக்கை ஒன்றிய பாஜக அரசை ஆத்திரம் அடைய செய்துள்ளது.
“விவசாயிகளின் போராட்டங்கள் மற்றும் அவர்களின் கோரிக்கைகள் குறித்து பிரதான ஊடகங்கள் பெரும்பாலும் மவுனமாகவே இருக் கின்றன. சமூக அக்கறை உள்ள ஊடகங்கள் விவ சாயிகள் மற்றும் மக்களுக்கு ஆதரவான நிலைப் பாட்டை எடுக்கும் போது அதை ஒன்றிய பாஜக அரசால் ஜீரணிக்க முடியவில்லை. சிறிய ஊடகங்கள் கூட குறிவைத்து நசுக்கப்படுகின்றன. இதுமட்டுமல்ல பல விவசாய சங்கத் தலைவர்களின் சமூக ஊடகக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
ஆட்சியாளர்களை எதிர்த்து கேள்வி எழுப்பி னால் “செய்தி இணையதளங்கள், யூடியூப் சேனல் கள் மற்றும் சமூக ஊடக கணக்குகளை முடக்கு வதை ஒன்றிய பாஜக அரசும் பல்வேறு மாநிலங்க ளில் உள்ள பாஜக அரசுகளும் வாடிக்கையாக வைத்துள்ளன. காஷ்மீர் மற்றும் மணிப்பூரில் நிலவும் உண்மை நிலை வெளியில் தெரியாமல் இருக்க ஏராளமான இணையதளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன அல்லது முடக்கப்பட்டுள் ளன. உலகின் இணைய முடக்கத்தின் தலைநக ராக இந்தியா மாறிவருவது கருத்துரிமைக்கு ஆபத்தானது. தனக்கு பிடிக்காத மற்றும் மாற்று கருத்துக்கொண்ட இணையத்தளங்களை வேண்டுமென்றே சீர்குலைப்பதை அனுமதிக்க முடியாது. சுயேச்சையான ஊடகம் மற்றும் ஜன நாயகத்திற்கு தீங்கிழைக்கும் ஒன்றிய அரசின் இத்தகைய போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.