1960இல் பம்பாய் மாநிலத்திலிருந்து பிரிந்து மொழிவழி மாநிலமாக குஜராத் மாநிலம் உருவாக்கப்பட்டது. ஆனால் ‘குஜராத்தை நான் உருவாக்கினேன்’ என்பதை தேர்தல் முழக்க மாக முன்வைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. குஜராத் பகுதிக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. குஜராத்தின் கலாச்சார வரலாறு நான்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு துவங்குகிறது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
ஆனால் சுய தம்பட்டம் அடிப்பதையே வாடிக்கையாகக் கொண்ட நரேந்திர மோடி, குஜராத் என்கிற நிலப்பகுதியையே இவர்தான் கண்டுபிடித்தது போல வாய்ப்பறை கொட்டி அலப்பறை செய்கிறார். ஒரு வாதத்திற்காக இப்போதைய குஜராத்தை இவர்தான் உரு வாக்கினார் என்று எடுத்துக் கொண்டால் மோர்பி தொங்கு பாலத்தைப்போல அறுந்து தொங்கு கிறது இவர்கள் உருவாக்கிய குஜராத்.
குஜராத் மாடல் என்று கூறித்தான் 2014 மக்கள வைத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது பாஜக. ஆனால் வெளிநாட்டுத் தலைவர்கள் வந்தால் குடிசைகளை படுதா போட்டு மறைக்கும் வகை யில்தான் இருக்கிறது இவர்களது குஜராத்.
மாநிலத்தில் வெறுப்புணர்வை பரப்பி வரும் பிரிவினைவாதக்குழுக்களை அந்த மாநிலத்தி லிருந்தே விரட்டி விட்டதாக தேர்தல் பிரச்சா ரத்தில் கூறியுள்ளார் மோடி. இத்தகைய வெறுப்பு வார்த்தைகளைக் கூறி சிறுபான்மை மக்களை வேட்டையாடியது மட்டுமல்லாமல் அவர்க ளுக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தையும் நீதி யையும் கூட வேட்டையாடி விரட்டியதைத்தான் மோடி இவ்வாறு கூறுகிறார் போலும்.
கோத்ரா ரயில் எரிப்பை தொடர்ந்து அந்த மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் பாஜக பரிவாரத்தால் நடத்தப்பட்ட வன்முறை தாண்டவத்தின் போது பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தை உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப் பட்டனர். பில்கிஸ்பானு கும்பல் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார். அந்த வழக்கில் தண்டிக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்தவர்களை விடுவித்ததுதான் மோடி உருவாக்கிய குஜராத்தின் லட்சணம்.
குஜராத்தில் இவரது ஆட்சியின் போது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர் கொல்லப்பட்டனர். இவரது கட்சியைச் சேர்ந்த அப்போதைய பிரதமர் வாஜ்பாயே எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளிநாடு செல்வேன் என வெதும்பினார். இத்தகைய கொடுமைக்குள்ளான ஒருவருக்கு கூட நிவார ணமோ, நீதியோ கிடைக்கவில்லை. ஆனால் குற்றமிழைத்தவர்கள் கொண்டாடப்பட்டார்கள்.
பொருளாதார வளர்ச்சியும் கூட குஜராத் குறித்த தகவல்கள் பொய்யாக உருவாக்கப்பட்ட வையே. குஜராத்தில் பாஜகவுக்கு எதிரான காற்றே வீசுகிறது. இதை மறைக்கத்தான் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வீராப்பாக பேசி பதற்றத்தை தணித்துக் கொள்ள முயல்கிறார்கள்.