headlines

img

எரியும் திரிபுரா

திரிபுராவில் வரலாறு காணாத வன் முறையை அரங்கேற்றியும், தில்லுமுல்லு செய்தும், வெறுப்பு அரசியலை விசிறிவிட்டும் பாஜக மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. எனினும் முதல்வரை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற் பட்டுள்ளது. இப்போதைய முதல்வர் மாணிக் சகாவும், முன்னாள் முதல்வர் பிப்ளப் குமாரும் பதவியை பிடிக்க முட்டி மோதி வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க, தேர்தலுக்கு பிறகும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடது முன்னணி தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது சங் பரிவார குண்டர்கள் கொடூரமான தாக்குதல்களை தொடுத்து வருகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தேர்தலுக்கு முன்பே பாஜகவினர் அராஜ கத்தை அரங்கேற்றி வாக்காளர்களை அச்சுறுத் தியதோடு எதிர்க்கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடுவதையும் தடுத்தனர். முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் உட்பட இடது முன்னணி தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கடுமையான அச்சுறுத்தலுக்கு மத்தியில்தான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடிந்தது.

கடந்த தேர்தலில் 44 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக இம்முறை 33 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. துணை முதல்வர் தோல்வி யடைந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்துள்ள அக்கட்சியினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஊழியர்களை குறி வைத்து தாக்கி வருகின்றனர்.

திரிபுரா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இடது முன்னணிக்கு தேர்தல் பணியாற்றியவர்கள் மற்றும் வாக்களித்தவர்களின் வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் வீடுகள் மற்றும் கடைகள், அலுவலகங்கள் தீக்கிரை யாக்கப்பட்டுள்ளன. தேர்தலில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சைலேந்திர நாத்தின் ரப்பர் தோட்டம் எரிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், பத்திரிகை யாளர்கள் கொடூர தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த வன்முறைகள் அனைத்தையும் பாஜக வினரே அரசு இயந்திரத்தின் துணையுடன் தலை மையேற்று நடத்தி வருகின்றனர். பாஜகவின் தேசியத் தலைவர்கள் இந்த வன்முறை வெறி யாட்டத்தை கண்டிக்கவோ, தடுத்து நிறுத்தவோ முன்வராமல் தூண்டிவிட்டு வருகின்றனர். 

2018ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்புக்கு பாஜக வந்ததிலிருந்தே திரிபுரா மாநிலம் வன்முறைக் களமாக மாற்றப்பட்டுள்ளது. இயல்பான ஜன நாயக நடவடிக்கைகள் மற்றும் உரிமைகள் முடக் கப்பட்டுள்ளன. தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற வுடன் பாஜகவினரின் அட்டகாசம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அங்கு இயல்பு வாழ்க்கை திரும்புவ தற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட வேண்டும். ஜனநாயகத்தின் அடித் தளத்தையே அசைத்துப் பார்க்கும் இந்த கொடிய வன்முறையை கண்டிக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் முன்வர வேண்டும். இத்தகைய போக்கை அனுமதித்தால் தேர்தல் அரசியல் என்பதே கேலிக்கூத்தாக்கப்பட்டுவிடும்.