headlines

img

பாரம்பரிய சிதைப்பு

பொதுவாக இந்தியாவைச் சேர்ந்த பிரதமரோ அரசியல் கட்சித்தலைவர்களோ வெளி நாடுகளுக்குச் செல்லும்போது நாட்டின் பெரு மையையும் புகழையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் பேசுவது வழக்கம். ஒருபோதும் உள்நாட்டு அரசியல் பிரச்சனைகளை அங்குள்ளவர்களிடம் விவாதிப்பதையோ  விமர்சனம் செய்வதையோ  தவிர்ப்பார்கள். இதுதான் கடந்த காலங்களில் பதவி வகித்த பிரதமர்கள் கடைப்பிடித்து வந்த பாரம்பரியம். 

ஆனால் பிரதமர் மோடி தற்பெருமைக்காரர் என்பது ஊரறிந்த விஷயம். அதுவும் உள்நாட்டில் பாஜக கூட்டங்களில் மட்டுமல்ல அரசு நிகழ்ச்சி களிலும் இந்தியாவுக்குத் தாம் தான் மீட்பர் என்பது போலப் பேசுவார்.  கடந்தகால ஆட்சியா ளர்களையும் எதிர்க்கட்சிகளையும் வசைபாடு வதையும் நாடு நாசமாய் போனதற்கு ஒட்டு மொத்தமாக  அவர்கள் தான் காரணம் என்பது போலவும் பேசுவார்.  இதை வெளிநாடுகளிலும் அவர் கடைப்பிடிப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.

இந்தோனேசியாவிற்குச் சென்றுள்ள பிரதமர் அங்கு இந்தியச் சமூகத்தினர் மத்தியில் பேசும்போது  ‘2014 ஆண்டுக்கு முந்தைய இந்தி யாவுக்கும் பிந்தைய இந்தியாவுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது ’’ என்று கூறியுள்ளார். ஒரு வகையில் பிரதமர் பேசியதில் உண்மை இருக்கிறது. 

உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ஹரியானா, அசாம் போன்ற பாஜக வலுவாக உள்ள  மாநிலங்களில் முஸ்லீம்கள் முன்பு சுதந்தி ரமாகவும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல்  வாழ்ந்துவந்தார்கள். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு முஸ்லிம்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. மாட்டிறைச்சி அல்ல, ஆட்டிறைச்சி யைச் சாப்பிட்டாலும் மாட்டிறைச்சி சாப்பிட்ட தாக அடித்துக் கொன்று போடும் நிலைமை முன்பு இல்லை. 2014க்கு பிந்தைய இந்தியாவில் இருக்கிறது.

பழங்குடியினர் தங்களது இருப்பிடங்களிலி ருந்து அகற்றப்பட்டு அவர்களின் நிலம் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் நிலக்கரி சுரங்கங்களுக்கும் தாரை வார்க்கும் நிலை முன்பு இல்லை. குடி யுரிமை திருத்தச்சட்டம், பொது சிவில் சட்டம் என்று முஸ்லீம்களையும் கிறிஸ்துவர்களையும் மிரட்டிய அரசு முன்பு இல்லை. இது மட்டு மில்லாது நாடு இப்போது முன்னெப்போதும் இல்லாத வேகத்திலும் அளவிலும் முன்னேறி வருவதாகவும்  கதையளந்துள்ளார்.  

மிகப்பெரிய சிலைகளை நிறுவியது, நல்லா இருக்கிற நாடாளுமன்றத்தைச் சிதைப்பதற்காக புதிய நாடாளுமன்றத்தைக்  கட்டுவது ஏற்கனவே இருக்கிற இந்தியா கேட்டிற்கு பதிலாகப் புதிதாகத்  தேசிய போர் நினைவுச் சின்னம், 32 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு மட்டும் துவக்கியது என முந்தைய ஆட்சியாளர்கள் உருவாக்காத விஷயங்களை அவர் செய்தி ருக்கிறார். இதில் 2014க்கு பிறகு நாட்டில் வேகத்தி லும் அளவிலும் வித்தியாசம் இருப்பது உண்மை தான்.