headlines

img

பிரதமரின் வெட்டி அரட்டை

நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் கௌதம் அதானியின் பித்தலாட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்க பிரதமர் மறுத்த நிலையில், அவை நடவடிக்கைகள் முடங்கின. குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்கு  பதிலளிக்கும் போது கூட அதானி என்ற பெய ரைக்கூட உச்சரிக்க மறுத்து பிரதமர் தன்னுடைய விசுவாசத்தை காட்டிக் கொண்டார். தனது உரையில் நாடு சந்திக்கும் வறுமை, வேலை யின்மை, ஊழல் போன்ற எதைப்பற்றியும் பேசாமல், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும், நேரு குடும்பத்தையும் தனிப்பட்ட முறையில் வம்பிழுத்தார் பிரதமர்.

நாடாளுமன்ற உரையில் மட்டுமின்றி, ஒவ்வொரு மாதமும் அவர் தயாரித்து படிக்கும் மனதின் குரல் நிகழ்ச்சியிலும் கூட ஆக்கப்பூர்வ மாக எதையும் பேசி விடக்கூடாது என்பதில் அவர்  உறுதியாக இருக்கிறார். 

இந்த மாதத்திற்கான மனதின் குரல் நிகழ்ச்சி யில் இந்தியாவில் யுபிஐ உலக நாடுகளை கவர்ந் துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மோடி ஆட்சி யில் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நட வடிக்கையின் பாதிப்பிலிருந்து நாடு இன்னமும் கூட மீளவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக் கான முக்கிய காரணங்களில் ஒன்றாக காகிதத் தாள் புழக்கத்தை முற்றாக குறைக்கப்படும் என்று  கூறப்பட்டது. ஆனால் கருப்புப்பணம், கள்ளப் பணம் ஒழியாதது மட்டுமல்ல, டிஜிட்டல் கரன்சி புழக்கமும் கூட எதிர்பார்த்த அளவு அதிகரிக்க வில்லை என்றே தரவுகள் கூறுகின்றன. ஆனால் டிஜிட்டல் திட்டங்களால் இந்திய மக்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கி வழிவதாக பிரதமர் புளகாங்கிதத்துடன் கூறியுள்ளார்.

இ-சஞ்சீவினி செயலி திட்டத்தால் பலன் பெற்றோர் எண்ணிக்கை பத்து கோடியை தாண்டி விட்டது என்றும் தாண்டிக் குதித்துள்ளார் பிரதமர். அத்தியாவசிய மருந்துகள் மீதான வரியை தொடர்ந்து உயர்த்திக் கொண்டே செல்கிறது ஒன்றிய அரசு. இதனால் பெரும் பகுதி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். செயலியில் சாப்பிட வேண்டிய மருந்தின் பெயரை மட்டும் கூறினால் போதுமா? அந்த மருந்துகள் மலிவு விலையில் கிடைக்கச் செய்ய வேண்டாமா? 

மருத்துவத்திலும் கூட தங்களுடைய கேடு கெட்ட வகுப்புவாத அணுகுமுறையை பின்பற்று கிறது ஒன்றிய பாஜக அரசு. இந்தாண்டு பட்ஜெட் டில் சித்த மருத்துவத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை வெறும் 90 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால் ஆயுர் வேத ஆய்வுக்கு 2500 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. கொரோனா காலத்தில் சித்த மருத்துவ அடிப்படையிலான கபசுர குடிநீர்தான் பெரும் பலன் தந்தது. ஆனால் அது தமிழ் மருத்துவம் என்பதால் பிரதமருக்கு கசக்கிறது.

பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து சுற்றுச் சூழலை காக்க வேண்டுமென்றும் பிரதமர் கூறி யுள்ளார். ஆனால் எட்டுவழிச்சாலை, மீத்தேன் திட்டங்கள், அணு உலைகள், வனங்கள் அழிப்பு போன்றவற்றால் சுற்றுச்சூழலை ஒன்றிய அரசே  கெடுத்துக் கொண்டிருப்பதை மனதின் குரல் எப்போது பேசும்?