வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியப் பொருளாதாரம் கடும் நெருக்கடியைச் சந்திக்கும் என அபாயச் சங்கை ஊதியிருக்கிறார்.
1947இல் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.3.30 ஆக இருந்தது. ஆனால் இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 77 ஆக வீழ்ச்சியடைந்திருக்கிறது. குறிப்பாக 2017ஆம் ஆண்டிலிருந்து 17.5 விழுக்காடு வீழ்ச்சிய டைந்திருக்கிறது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வீழ்ச்சியால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்திய ஜிடிபி ரூ.3 லட்சம் கோடியிலிருந்து ரூ.2.90 லட்சம் கோடியாக குறைந்திருக்கிறது. இந்த லட்சணத்தில்தான் மோடி இந்தியப் பொருளாதா ரத்தை 5லட்சம் கோடியாக உயர்த்தப் போவதாக வாயில் வடை சுடுகிறார்.
உ.பி உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் முடிவ தற்கு முன்பு இந்தியப் பொருளாதாரம் தலை நிமிர்ந்து வருகிறது என முழங்கினர். தேர்தல் முடிந்த பின்னர் இந்தியா பொருளாதார நெருக்கடியில் இருப்பதாக நீலிக்கண்ணீர் வடிக்கிறார். அதுவும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்த நெருக்கடி என்கிறார். கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு ஒரு பேரல் கச்சா எண்ணெய் 81 டாலராக இருந்தது. அதன் பின்னர் படிப்படியாக உயர்ந்து தான் இப்போது பேரல் 140 டாலரை எட்டி யிருக்கிறது.
இந்த உயர்வு ஏதோ ஒரே நாளில் ஏற் பட்டது போன்ற தோற்றத்தை உருவாக்க முயல் கிறார். உக்ரைன் - ரஷ்யா போர் இன்றுதான் துவங்கியதா? தேர்தலின் போது பெட்ரோல், டீசலின் விலையை உயர்த்தினால், மக்கள் வாக்கு கள் மூலம் அதற்குப் பதிலளிப்பார்கள். அதனால் விலை உயர்வு அறிவிக்கப்படவில்லை. இப்போது தேர்தல் முடிந்து விட்டது. இனி வழக்கம் போல் மக்கள் மீது தாக்குதலைத் தொடுக்கப் போகிறோம் என்பதற்கான சமிக்ஞையே நிதியமைச்சரின் பேச்சு.
ஜிஎஸ்டி வரி விகிதம் இனி குறைந்த பட்சம் 5 விழுக்காடு என்பதை இனி 8 விழுக்காடாக உயர்த்தும் திட்டம் தயார் செய்யப்பட்டிருக்கிறது. அதன் மூலம் ரூ 1.5 லட்சம் கோடியை கூடுதல் வரு வாயாக வாரிச் சுருட்டுவது என ஒன்றிய அரசு முடிவு செய்திருக்கிறது. விரைவில் பெட்ரோலி யப் பொருட்கள் மட்டுமின்றி, ஜிஎஸ்டி வரி உயர்வை யும் அறிவித்து ஒன்றிய அரசு தாக்குதலைத் தொடுக்கும். இந்தத் தாக்குதல் மக்கள் மீது கொத்துக்குண்டுகள் போல் இறங்கி, மக்களின் வாழ்வா தாரத்தைப் படுகுழியில் தள்ளும். எனவே ஒட்டு மொத்த சுமையையும் மக்கள் மீது இறக்குவதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். கார்ப்பரேட்க ளுக்கு வாரி வழங்கியிருக்கும் சலுகைகளை வரியாக மாற்றி பற்றாக்குறையை ஈடு செய்ய வேண்டும்.
ஏற்கனவே மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அளித்து வந்த ஜிஎஸ்டி ஈட்டுத்தொகை இந் தாண்டு ஜூன் மாதத்தோடு முடிவுக்கு வருகிறது. இது மாநில அரசுகளையும் சேர்த்து முடக்கும். ஒன்றிய அரசுக்கு இந்திய மக்களின் மீது உண் மையான அக்கறை இருக்குமானால், ஜிஎஸ்டி ஈட்டுத் தொகைக்கான கால வரம்பை நீட்டித்தும், பெட்ரோலியப் பொருட்களின் வரிவருவாய் உள் ளிட்டு அனைத்து வருவாய்களையும் மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தும் அளிக்க வேண்டும்.