தமிழகத்தில் 27 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.10 முதல் ரூ.40 வரை உயர்த்தப்பட்ட கட்டணம் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்து உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்ததுடன், கட்ட ணத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணை யத்தின் கீழ் 48 சுங்கச்சாவடிகள் (டோல்கேட்) உள்ளன. இவற்றைப் பயன்படுத்துவோருக்கான கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ஆம் தேதி 27 சுங்கச் சாவடிகளுக்கும், செப்டம்பர் 1ஆம் தேதி 21 சுங்கச்சாவடி களுக்கும் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், 27 சுங்கச்சாவடிகளைப் பயன்படுத்துவோருக்குக் கட்ட ணம் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தேசிய நெடுஞ்சாலை கள் ஆணையம் கூறியுள்ளது. வாகனத்தின் வகையைப் பொறுத்து ஒரு பயணத்திற்கு ரூ.5 முதல் ரூ.120 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடிகளில் 15 ஆண்டுகள் அல்லது சாலை அமைத்த முதலீடு திரும்பப் பெறும் வரை கட்ட ணம் வசூலிக்கப்பட வேண்டும். அதற்கு பின்னர் 40 சதவீத சாலை பராமரிப்புக்கான கட்டணம் வசூலிக்கப் பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 8 முதல் 10 சதவீத அளவிற்குச் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஏற்க னவே நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப் பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வரும் நிலையில் சுங்கக் கட்டண உயர்வு என்பது இரட்டிப்புச் சுமையாக மாறி யுள்ளது. ஒன்றிய அரசின் இந்த முடிவு சாமானிய மற்றும் நடுத்தர வர்க்க மக்களை மேலும் மேலும் வதைக்கும் செயலாகும்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 48 சுங்கச் சாவடி களில் பெரும்பாலும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றில் நகர்ப்புற பகுதிகளில் 14 சுங்கச் சாவடிகளும், புறநகர் பகுதிகளில் 9 சுங்கச் சாவடி களும் உள்ளன. நான்கு வழிச் சாலைகளைப் பொறுத்த வரையில் நகராட்சிக்குள் 10 கி.மீ, மாநகராட்சிக்குள் 10 கி.மீ, தொலைவிற்குள் இருக்கும் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்திருந்தார். அதன டிப்படையில் சென்னையில் பரனூர் (செங்கல்பட்டு), வானகரம், சென்னசமுத்திரம், நெமிலி, சூரப்பட்டு என 5 சுங்கச்சாவடிகளை அகற்றப்பட வேண்டும். மதுரை, திருச்சியிலிருந்து சென்னைக்கு வரும் வாகனங்கள் பர னூர் சுங்கச்சாவடியைக் கடந்துதான் சென்னைக்குச் சென்று வரவேண்டும். அதனால், முன்னுரிமை கொடுத்து இந்த சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று கடந்த 6 மாதத்திற்கு முன் மாநில அரசு ஒன்றிய அர சிடம் வலியுறுத்தியது. ஆனால் ஒன்றிய அரசு இன்னும் அகற்றவில்லை. இந்த நிலையில் தற்போ தைய சுங்கக் கட்டண உயர்வால் ஏற்கனவே நிதி நெருக் கடியில் தள்ளாடிக் கொண்டிருக்கும் அரசு போக்கு வரத்துக் கழகங்களுக்கும், கூடுதல் செலவு ஏற்பட்டு உள்ளது. சுங்கக் கட்டண உயர்வால் மறைமுகமாகச் சரக்கு வாகனங்களின் வாடகைக் கட்டணம் அதிகரித்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும். எனவே ஒன்றிய அரசு சுங்கக் கட்டண உயர்வை உட னடியாக திரும்பப் பெறுவதோடு தேவையற்ற நிலை யில் உள்ள சுங்கச்சாவடிகளை உடனடியாக மூட வேண்டும்.