headlines

img

நூலக இயக்கத்தை சிதைக்காதே!

மாநில நூலகங்களின் அதிகார வரம்பை ஒருங்கியல் பட்டியலுக்கு’ மாற்றும் மசோ தாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த கலாச்சார அமைச்சகம் தயாராகி வருகிறது.  ஒன்றிய அரசின் இந்த முயற்சிக்கு தமிழ்நாடு, கேரளா அரசுகள் கடும் கண்டனத்தைத் தெரி வித்துள்ளன. ஒன்றிய அரசின் இந்த நட வடிக்கை மாநிலங்களின் சொந்த அதிகார வரம்பிற்குள் தலையிடுவதாக உள்ளது என்று கேரளா கூறியுள்ளது.  நூலகங்களை நிர்வ கிப்பதில் மாநில அரசுகளுக்கு உள்ள  சுயாட்சியைச்   சிதைக்கக்கூடாது என்றும் தொடர்ந்து நூலகங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கவேண்டும் என்றும் அம்மாநில அரசு கூறியுள்ளது.  

இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை உலகளவில் கொண்டு செல்ல வும் நூலக அமைப்புகளை நவீனமயமாக்க வும் நூலகங்களை ஒருங்கியல் பட்டியலுக்கு மாற்ற முயல்வதாக ஒன்றிய அரசு வாதிடு கிறது. ஆனால் நூலகங்களை தனது கட்டுப் பாட்டில் எடுத்துக்கொண்டு அதில் தங்க ளது இந்துத்துவா சித்தாந்தத்தை உள்ள டக்கிய புத்தகங்களைத் திணிப்பதே    ஒன்றிய அரசின் நோக்கமாக இருக்கும் என்று  நூலக  ஆர்வலர்கள் சந்தேகப்படுகிறார்கள்.

நூலகங்கள் ஒன்றிய அரசின் கட்டுப் பாட்டிற்குள் சென்றால்  புத்தகங்களைத் தேர்வு செய்தல், நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை பாதிக் கப்படும். தற்போதைய நூலக கட்டமைப்பில் பலதரப்பட்ட  வெளியீட்டாளர்களிடமிருந்து புத்தகங்களை வாங்குவதற்கு வசதியாக நூலகங்களுக்கு  மாநில  அரசுகளின் சார்பில் கணிசமான நிதி வழங்கப்படுகிறது. கேரளாவில் பள்ளி நூலகங்களுக்குப் புத்த கங்களை விநியோகிப்பதிலும், வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதிலும் உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

நூலகங்களின் கட்டுப்பாட்டை ஒன்றிய அரசு எடுத்துக் கொண்டால்,  இந்த பணிகள் அனைத்தும் சீர்குலையும். புத்த கங்களைக் கொள்முதல் செய்து விநியோகம் செய்யும் பொறுப்பை ஒன்றிய அரசு ஏற்கும் போது தேர்வு செய்யப்படும் புத்தகங்களின் வகை குறித்தும் நிச்சயமற்ற நிலை  உரு வாகும். நாட்டிலேயே கேரளாவில் புத்த கங்களைத் தேர்வு செய்வதில் கூட உள்ளாட்சி அளவில் ஜனநாயகப்பூர்வ ஏற்பாடு உள்ளது.

தமிழ்நாட்டில் பொது நூலக இயக்கம் சுதந்திரத்திற்கு முன்பே மிகவும் வலுவாக வளர்ந்துள்ளது. மக்களுக்கு அறிவைப் போ திக்கும் ஆவணப் பல்கலைக்கழகங்களாக நூலகங்கள் திகழ்கின்றன. ஒன்றிய அரசின் திட்டம், அரசியல் சாசன சட்டத்திற்குப் புறம்பானதாகும். மாநில கூட்டாட்சித் தத்து வத்தின் மீதான அத்துமீறலாகும். இந்த யோச னையை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட  வேண்டும்.