இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குழந்தை களுக்கான இருமல் மற்றும் சளிக்கான சிரப் காம்பியாவில் 66 குழந்தைகளின் உயிரைப் பறித்துவிட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஹரியானா மாநிலம் சோனிப்பட்டில் மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் தயாரிக்கும் வாய்வழியாக செலுத்தக்கூடிய ப்ரோமெதாசின், கோஃபெக்ஸ் மாலின் பேபி காப் சிரப், மாகோஃப் பேபி காஃப் சிரப் மற்றும் மேக்ரிப் என் கோல்ட் சிரப் ஆகிய நான்கு தயாரிப்புகள் தரமற்றவை என்பது பரிசோதனை யில் தெரியவந்துள்ளது.
குழந்தைகள் இறந்த பின்னரும் தனது தயாரிப்புகளின் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த உத்தரவாதத்தை அந்த நிறுவனம் வழங்க வில்லை. காம்பியா நிகழ்வுக்குப் பிறகு நான்கு மருந்துகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் இருப்பது உறுதிசெய்யப் பட்டது. இந்த ரசாயனங்கள் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. இந்த கலவை உள்ள மருந்துகளை குழந்தைகள் உட்கொள்ளும் போது வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, சிறுநீர் கழிக்க இயலாமை, தலைவலி ஏற்பட்டு அது மரணத்திற்கு வழிவகுக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்த மருந்துகளின் தயாரிப்புகளைத் தேசிய மருந்துதர கட்டுப்பாட்டுக் கழகம் பகுப்பாய்வு செய்யப்படும் வரை அந்த மருந்துகள் அனைத்தும் பாதுகாப்பற்றது என்று அது அறி வித்துள்ளது. உலகில் அதிகளவில் மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இங்கு தயாரிக்கப்படும் மருந்துகள் தரம் மற்றும் குறைந்தவிலை என்ப தால் உலகம் முழுவதும் அவற்றுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இந்த நிலையில் தரமற்ற மருந்தால் காம்பியா வில் குழந்தைகள் உயிரிழந்தது கவலை அளிக்கிறது. 2011 ஆம் ஆண்டே இந்த நிறு வனத்தின் தயாரிப்புகளுக்கு பீகார் மாநில அரசு தடை விதித்துள்ளது. அளவுக்கு அதிகமான ரசாயன கலவைகள் காம்பியாவில் மட்டுமல்ல ஜம்மு- காஷ்மீரில் 2020ல் சில குழந்தைகள் உயிரி ழக்கவும் காரணம் என்பதும் தெரியவந்துள்ளது. 2015ல் குஜராத் மாநிலத்தில் தரமற்ற மருந்து இது எனக் கண்டுபிடிக்கப்பட்டது. 2017 கேரளாவில் மெய்டன் நிறுவனத்தின் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2021 முதல் 2022வரை ஐந்துமுறை இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் தரமற்றவை என்று தெரியவந்த பிறகும் தேசிய மருந்துதர கட்டுப்பாட்டுக் கழகம் நடவடிக்கை எடுக்கவில்லை. காம்பியா வில் குழந்தைகள் இறந்த பிறகே இந்தியாவில் இந்த மருந்துகளின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோதாது குழந்தை களின் உயிரை பறித்த மருந்து நிறுவனத்தின் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவேண்டும், சம்பந்தப்பட்டவர்களை உடனே கைது செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இது குழந்தைகளின் உயிர் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல இந்திய மருந்து நிறுவனங்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்டதும் ஆகும்.