headlines

img

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தொடரும் அத்துமீறல்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நிர்வாகத் தின் தலையிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மாநில அரசை மிரட்டியுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை. 

சிதம்பரம் கோவிலில் கடவுள் நம்பிக்கை  கொண்டவர்கள் சென்று தாங்கள் விரும்பியபடி வழிபடுவதை தொடர்ந்து தடுத்துவரும் தீட்சி தர்களை கண்டிப்பதற்கு பதிலாக வழிபாட்டு உரிமையை நிலைநிறுத்த முயலும் இந்து சமய அறநிலையத் துறையை அண்ணாமலை மிரட்டுவதிலிருந்து பாஜக அனைத்து இந்துக்க ளுக்காகவும் குரல் கொடுக்கும் அமைப்பு அல்ல என்பதும், சனாதன மேலாதிக்கவாதிகளுக்கான அமைப்பே என்பதும் தெளிவாகிறது.

நந்தனார், வள்ளலார் காலத்திலிருந்தே சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ள சிதம்பரம் நட ராஜர் கோவிலில் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பாடல்களை பாட முயன்ற ஆறுமுக சாமி தீட்சிதர்களால் கொடூரமாகத் தாக்கப் பட்ட நிகழ்வுகளும் நடந்தன. 

சிதம்பரம் கோவிலை தங்களுடைய கட்டுப் பாட்டுக்குள் வைத்துள்ள தீட்சிதர்கள் ஆடம்பர திருமணங்களுக்கு கோவில் மண்டபங்களை வாடகைக்கு விட்டதும், கோவில் உண்டியல் பணம் மற்றும் நகைகளுக்கு முறையான கணக்கு காட்ட மறுப்பதும் அடாவடியாகும்.

சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் என்னும் கொடிய பழக்கத்தைக்கூட இன்னமும் முற்றாகக் கைவிடவில்லை என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு வழக்குகள் பதியப் பட்டுள்ளன. இந்த நிலையில், கனகசபை மீது ஏறி நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தீட்சிதர்கள் தடை விதித்தது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு மாற்றாக வைக்கப்பட்ட தடை தொடர்பான பதாகையை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பக்தர்களையும் தாக்க முயன் றுள்ளனர். காவல்துறை பாதுகாப்புடன் கனக சபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள் ளனர். இதைத்தான் அண்ணாமலை அத்து மீறல் என்று அலறுகிறார்.

சிதம்பரம் கோவிலை தங்களுடைய தனிச் சொத்தாக கருதிக் கொண்டு பூஜை செய்யும் தீட்சிதர்கள் நடந்து கொள்வது முறையல்ல. காணிக்கைப் பணத்திற்கு கணக்கு காட்ட மறுப்பது, நகை தணிக்கைக்கு உடன்பட மறுப்பது என தீட்சிதர்கள் நடந்து கொள்கின்றனர். சிதம் பரம் கோவிலுக்கு தரும் காணிக்கை என்பது பக்தர்கள் மூலமாகவே வருகிறது. இதை கண்கா ணிக்கும் பொறுப்பு இந்து சமய அறநிலையத் துறைக்கு உண்டு. உரிய ஆவணங்களை திரட்டி சிதம்பரம் கோவிலை மீண்டும் இந்துசமய அறநிலை யத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும். 

பாஜகவினர் கோருவது போல கோவில்கள் தனியார்மயமாக்கப்பட்டால் என்ன நடக்கும் என்பதற்கு சிதம்பரம் கோவில் சாட்சியாக இருக்கிறது.