headlines

img

இது கரை சேர்க்காது

குறிப்பிட்ட சமூகத்தினருக்கு சலுகைகளை வழங்கி அரசியல் செய்வதில் பாஜகவுக்கு நம்பிக்கையில்லை என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கர்நாடக மாநிலம் பிடார் மாவட்டத்தில் ஞாயிறன்று நடந்த பொதுக் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

இப்படி துணிச்சலாக பொய் பேசுவதற்கு இவர்க ளை அடிச்சுக்க ஆளே இல்லை என்பது தெரிந்ததுதானே. ஏன் திடீரென்று இப்படி பேசியி ருக்கிறார் என்று பார்த்தால் கர்நாடக மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் முஸ்லிம்க ளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு இருந்ததை இப்போ தைய பசவராஜ் பொம்மை பாஜக அரசு ரத்து  செய்து விட்டது. அதனை சரி என்று சாதிக்கத் தான் அமித்ஷா அப்படிப் பேசியிருக்கிறார்.

ஆனால் ரத்து செய்த 4 சதவீதத்தை ஒக்க லிகா சமூகத்தினருக்கும் வீர சைவ-லிங்காயத் சமூகத்தினருக்கும் தலா 2 சதவீதம் சேர்த்து ஏற்கெனவே அவர்களுக்கு இருக்கும் உள் ஒதுக்கீட்டை 6 சதவீதம், 7 சதவீதமாக உயர்த்தியி ருக்கிறது கர்நாடக பாஜக அரசு. எல்லாம் சட்ட மன்றத் தேர்தல் படுத்தும் பாடுதான்.

எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இப்படி மதரீதியாக, சாதி ரீதியாக நடவடிக்கையை எடுத்திருக்கும் பாஜக அரசை அமித்ஷா பாராட்டுகிறார். இது குறிப்பிட்ட சமூகத்தினருக்கு சலுகைகளை வழங்குவது இல்லையா?

மாநில பாஜக அரசின் இத்தகைய நடவடிக் கைக்கு அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள் ளது. காங்கிரஸ், ஓபிசி பட்டியலில் இருந்து முஸ்லிம்களை நீக்கியதற்கு எந்த ஒரு அடிப்படை யான காரணமும் இல்லை என்று கூறியுள்ளது. அத்துடன் 45 நாட்களில் காங்கிரஸ் ஆட்சி வந்த பின், தற்போதைய பாஜக அரசின் நடவடிக் கையை ரத்து செய்வோம் என்றும் கூறியுள்ளது.

பொதுவாக இடஒதுக்கீடு போன்ற முக்கியப் பிரச்சனைகளில் பொதுக் கருத்து அடிப்படை யிலேயே சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். அது தான் சமச்சீரான வாய்ப்புகளை வழங்கி சமூக நீதியை ஏற்படுத்துவதாக அமையும். ஆனால் இவர்களது மதரீதியான, சாதிரீதியான பாகு பாட்டின் அடிப்படையிலேயே தற்போது முஸ்லிம் களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டி ருப்பதும் அதனை மற்ற இரு சாதிகளுக்கு பிரித்துக் கொடுத்து அந்த சமூகத்தினரை தாஜா செய்ய முயற்சித்திருப்பதும் நடந்திருக்கிறது. ஆனால் வாய்ப்புக் கிடைக்கும் போது அல்லது வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு சிறுபான்மையினர், தலித் மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடு படுவதையே பாஜக வழக்கமாகக் கொண் டுள்ளது. 

மாநில ஆட்சி ஏற்கெனவே ஊழல் மற்றும் முறைகேடுகளால் அவப்பெயர் பெற்று விளங்குவதால் வெற்றி பெற முடியாது என்று கருத்துக் கணிப்புகள் வெளியான நிலையில் கடைசி முயற்சியாக இந்த நடவடிக்கை தங்களை கரை சேர்க்கும் என்று எண்ணியிருக்கிறார்கள். ஆனால் இது பாஜகவை கரை சேர்க்காது.