மருத்துவக் கல்வி பயில விரும்பும் ஏழை மாணவர்களுக்கு நீட் எனும் தேர்வு தாண்ட முடியாத தடையாகி அதுவே வாழ்வின் இறுதி யாகவும் அமைந்து விடுகிறது. ஒன்றிய அரசின் பிரதிநிதியாக சனாதனத்தின் பிரச்சாரகராக தமிழ்நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் தேர்வு விலக்க மசோ தாவுக்கு கையெழுத்திட மறுத்து மாணவத் தளிர்களின் மருத்துவக் கனவை மட்டுமல்ல, வாழ்க்கையின் இலக்கையும் கருக வைத்துக் கொண்டிருக்கிறார்.
மேல்நிலைக்கல்வியில் மிகக்குறைந்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் கூட பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து 2,3 ஆண்டுகள் படித்து அதிலும் கூட முறைகேடுகள் செய்து- தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண்கள் ‘வாங்கி’ மருத்துவக் கல்வியில் சேர்ந்து விடுகின்றனர்.
அவ்வாறு பணத்தைக் கொட்டி செல வழித்து படிக்க முடியாதவர்கள் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றாலும் கூட, அரசு மருத்து வக் கல்லூரிகளில் இடம் கிடைக்காததால் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் போகிறது. அதைத்தான் சென்னை குரோம்பேட்டை மாண வர் ஜெகதீஸ்வரன், அவரது தந்தை ஆகியோ ரின் தற்கொலைகள் உணர்த்துகின்றன.
அவர்களிடம் பணமும் பொருளாதார வாய்ப்பும் இருந்திருந்தால் தனியார் கல்லூரிக ளில் ஏதாவது ஒன்றில் சேரும் முடிவை எடுத்தி ருப்பார்கள். வசதியில்லாத காரணத்தாலேயே இந்த இரு உயிர்கள் பலியாகிவிட்டன.
அதே நாளில் ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்வில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி யின் தந்தை அம்மாசியப்பன், மற்ற ஏழை எளிய வர்களின் குரலாக நீட்தேர்வு விலக்கு மசோதா வுக்கு ஒப்புதல் தர வேண்டும் என கோரிக்கை வைத்த போது, ஆணவத்துடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திட மாட்டேன் என்று பதிலளித்ததுதான் இந்த இரு உயிர்களைப் பறித்துவிட்டது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பயிற்சி பெற்ற மாணவர்கள் 20 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் நீட் விலக்கு மசோதா இருமுறை சட்டமன்றத்தில் நிறை வேற்றி அனுப்பப்பட்டும் அதற்கு ஒப்புதல் அளிக்காதது தான் தற்போது இரு உயிர்களைப் பறித்தது. அதனால் தான் முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதி ஒப்பு தல் தரக் கோரியிருக்கிறார்.
ஸ்டெதாஸ்கோப் தொங்க வேண்டிய கழுத்தை தூக்குக் கயிறுகள் இறுக்கும் நிலையை இனி அனுமதிக்கக் கூடாது. அதற்கு ஒன்றிய பாஜக ஆட்சி அகற்றப்பட வேண்டும். அப்போதுதான் இத்தகைய உயிர்ப்பலிகள் நிகழாதிருக்கும்.