headlines

img

பெயர் மாற்றத்தின் பின்னணியில்...

மத்திய தணிக்கைக் குழு ஒன்றிய பாஜக கூட்டணி அரசின் 7.5 லட்சம் கோடி ஊழலை அம்பலப்படுத்தியதால் பதற்றமடைந்துள்ள பாஜகவினர் இந்திய மக்களின் கவனத்தை திசை திருப்ப பல்வேறு சித்து வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

விலைவாசி உயர்வு, வேலையின்மை தீவிரம் மணிப்பூர் கலவரம் போன்ற எந்தவொரு பிரச்சனைக்காகவும் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட முன்வராத மோடி  அரசு திடீரென நாடாளுமன்ற கூட்டத்தை கூட்டப் போவதாக அறிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தின் நோக்கம் குறித்து ஒன்றிய அரசு தெளிவு படுத்தாத நிலையில் பல்வேறு யூகங்கள்  வெளியாகின்றன. ஒரே நாடு, ஒரே தேர்தலுக் கான சட்டத் திருத்தத்தை கொண்டுவரப் போவ தாகவும், பொதுசிவில் சட்டத்திற்கான  அறி விப்பை வெளியிடப்போவதாகவும்  பல்வேறு  செய்திகள் அரசுத் தரப்பில்  கசியவிடப்படுகின்றன. 

இதனிடையே இந்தியா எனும் பெயரை  மாற்ற மோடி அரசு முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகவில்லை என்ற போதிலும் ஜி20 மாநாட்டையொட்டி குடியரசுத் தலைவர் பெயரில் அனுப்பப்பட்ட அழைப்பிதழில் இந்தியா என்கிற பெயருக்குப் பதிலாக பாரத் என்ற  பெயர் இடம்பெற்றது. கடும் விமர்சனமும் எதிர்ப்பும் எழுந்த நிலையில், இந்தியா  எனும் பெயரை மாற்றும் திட்டம் எதுவும்  இல்லை  என ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் மறுப்பு தெரிவித்தார். 

ஆனால், ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி  இருக்கைக்கு முன்னால் இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என்று இடம்பெற்றிருந்தது. அரசியல் சட்டத்தின்படி இரண்டு பெயரையும் பயன்படுத்தலாம் என்று பாஜகவினர் கூறு கின்றனர். ஆனால் திடீரென இத்தகைய குழப் பத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் என்ன? 

7.5 கோடி ரூபாய் ஊழல் புகாரிலிருந்து மக்க ளின் கவனத்தை திசைதிருப்புவதற்காகவே  இத்தகைய சர்ச்சைகளை ஒன்றிய அரசு கிளப்பி விடுகிறது. அதேபோல ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற சர்ச்சையும் கிளப்பிவிடப்பட்டுள்ளது. 

இதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு  அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய குழுக்களு க்கு முன்னாள் குடியரசுத் தலைவர்கள் நியமிக்கப் படுவதில்லை. ஆனால் எந்த நியதியையும் பாஜக அரசு பின்பற்றுவதில்லை.  

நாடாளுமன்ற ஜனநாயக முறைக்கு முடிவு கட்டி கொஞ்சம் கொஞ்சமாக ஜனாதிபதி ஆட்சி  முறையை கொண்டுவரவும், எதேச்சதிகாரத்தை நோக்கி நாட்டை நடத்திச் செல்லவும்  மோடி அரசு திட்டமிடுகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின்  அகண்ட பாரதம் என்ற செயல்திட்டத்தின் ஒரு  பகுதியாகவே இத்தகைய தேவையற்ற வேலை களை மோடி அரசு செய்து வருகிறது. இந்திய திரு நாட்டை வழிநடத்துவது அரசியல் சட்டமேயன்றி ஆர்எஸ்எஸ்-சின் ரகசிய திட்டங்கள் அல்ல என்பதை உரத்துச் சொல்ல வேண்டிய நேரம் இது.