headlines

img

வள்ளலார் விழாவும், ஆளுநர் சேட்டையும்

வள்ளலார் என்றழைக்கப்பட்ட இராம லிங்க அடிகளாரின் 200ஆவது ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி கடந்த ஓராண்டாக தமிழ்நாடு அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளது. வள்ளலாரின் கொள்கை களைப் பரப்பும் பல்வேறு திட்டங்களை மாநில அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.

வள்ளலாரின் முக்கியமான பாடல்கள் மற்றும் கருத்துக்களைத் தொகுத்து இந்தி உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து மொழி களிலும் வெளியிட வேண்டும். ஆங்கிலம் உள்ளிட்ட அயல்நாட்டு மொழிகளிலும் வெளி யிடுவதன் மூலம் வள்ளலாரை உலக மக்கள் புரிந்து கொள்ள முடியும். திருக்குறளை பல்வேறு மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட்ட தால் தான் அதன் பெருமையை உலகமறிந்தது. 

வடலூரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றுப் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி வள்ளலார் சனாத னத்தின் உச்சம் என்று கூறி அவரை இழிவு படுத்தினார். இதற்கு தமிழறிஞர்கள் மத்தியிலி ருந்து மட்டுமல்ல, வள்ளலாரின் சமரச சுத்த, சன்மார்க்க நெறியை பின்பற்றுபவர்களிட மிருந்தும் கடும் எதிர்ப்பு எழுந்தது. சாதி, மத வேறுபாடுகளையும், பெண்ணடிமைத் தனத்தையும், மூட நம்பிக்கைகளையும் கடுமை யாகச் சாடியவர் வள்ளலார். அதற்கு நேர் எதிரான முகாமிலிருக்கும் ஆளுநர் வள்ளலா ரை மீண்டும் சீண்டியுள்ளார்.

“வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடி னேன்” என்ற வள்ளலாரின் பாடல்தான் சனா தனத்தின் சாரம் என்று ஆளுநர் மீண்டும் உளறி யுள்ளார். வள்ளலாரின் ஆன்ம நேய ஒருமைப் பாட்டு உள்ளத்தை குறுகிய புத்தியும், நரித்தன மும் கொண்ட ஆளுநர் தொடர்ந்து அவ மதிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இதனிடையே, நந்தனார் பிறந்த ம.ஆதனூர் கிராமத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்க ளுக்கு உபநயனம் எனும் சடங்கை செய்து பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சியில் ஆளுநர் பங்கேற்றுள்ளார். பிறப்பினால் யாரும் உயர்வு தாழ்வு இல்லை; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறள் நெறிக்கு மாறாக பூணூல் அணிவதன் மூலம் ஒருவரை மேல்நிலையாக்கம் செய்ய முடியும் என்பதுதான் இந்த நிகழ்வின் பொருள். இராமானுஜர், வள்ளலார், அய்யன் காளி, நாராயணகுரு, வைகுண்ட சாமிகள் போன்றவர்கள் சமய வரம்புக்குள் நின்று சாதியை ஒழிக்க போராடினர். ஆனால் பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி அத்தகையது அல்ல. இந்த காலத்திற்கு அது பொருந்தக்கூடியதும் அல்ல. எனவே ஆளுநர் இத்தகைய வேண்டாத வேலைகளை விட்டுவிட்டு உருப் படியாக எதையாவது யோசிப்பது நல்லது.