headlines

img

நீட் தேர்வில் தொடரும் குளறுபடிகளும் மோசடிகளும்

மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வில் வழக்கம் போல் இந்தாண்டும் குளறுபடிகளும் மோசடிகளும் நடந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதனால் தேர்வெழுதிய மாணவர்கள் வேதனை யடைந்துள்ளனர்.  

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் மருத்து வப் படிப்புக் கனவு தகர்ந்து போனது. இதனால் ஆண்டுக்கு ஆண்டு மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் பல மாணவர்கள்  பயிற்சி மைய விடுதியிலேயே தங்களது உயிரை மாய்த்துக் கொண்டனர். 

பணம் படைத்தவர்கள் அதிகளவு பணம் கொடுத்து பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்கின் றனர். மேலும் அவர்களில் சிலர் கேள்வித்தாள் களை வாங்கி எழுதி முறைகேடுகளில் ஈடுபட்டு மருத்துவ சேர்க்கையை உறுதிப்படுத்திக் கொள்கி றார்கள். சில இடங்களில் முன்கூட்டியே வினாத் தாளைப் பெற்று அதற்கு ஏற்ப சில மாணவர்கள் தயாராக பயிற்சி மையங்களே உதவி செய்கின் றன.  அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் கூட முறைகேட்டில் ஈடுபட்டதாக பீகார், ராஜஸ்தான் உள்பட நாடு முழுவதும் பெற்றோர், மாணவர்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகள் என 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 

இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் இயற்பியல் பாடத்திலிருந்து கேட்கப்பட்ட கேள்வி, பழைய பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப் பட்டுள்ளது.  கருணை மதிப்பெண் மூலம் சுமார் 44 மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். இத னால் சுமார் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மாண வர்கள் தேசிய தேர்வு முகமையில் முறையீடு செய்தனர். இதனால் அந்தக் கேள்விக்கு என்ன பதில் அளித்திருந்தாலும் (தவறாகவே இருந்தாலும்) மதிப்பெண் வழங்கப்பட்டது. இந்த கருணை மதிப்பெண் மூலம் 44 மாணவர்கள் பெற்றிருந்த 715 மதிப்பெண்கள் 720 ஆக உயர்ந்தது. ராஜஸ்தானில் முழு மதிப்பெண் பெற்ற 11 பேரில் எட்டு பேர் ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த வர்கள் என்பதும் அந்த மாணவர்களின் தேர்வு எண்கள் அடுத்தடுத்து உள்ளன என்பதும் நீட் தேர்வில் மோசடி நடைபெற்றுள்ளதை உறுதிப் படுத்துகின்றன. 

பொதுவாக நீட் மற்றும் பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு எதிரானவை. சமூகநீதிக்கு சவால் விடுபவை. எனவே மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான உரிமையை ஒன்றிய அரசு மீண்டும் மாநில அரசுகளுக்கே வழங்க வேண்டும். பழைய படி பிளஸ் டூ பொதுத்தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்தவேண்டும்.