headlines

img

நம்பிக்கையளிக்கும் சிவப்பலை

பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் லூயிஸ் இனா சியோ லூலா டி சில்வா வெற்றி பெற்றிருக்கி றார். இந்த   வெற்றி உலகளவில் உழைப்பாளி மக்க ளுக்கு மட்டுமின்றி, இப் பூவுலகை நேசிக்கும் அனைவருக்கும் பெரும் நம்பிக்கையை ஏற் படுத்தியிருக்கிறது. காரணம் வலதுசாரிகளின் மாடல் என்று உலகளவில் வர்ணிக்கப்பட்ட பொல் சானரோவின் தோல்வி மட்டுமல்ல; உலகள வில் வலதுசாரி கருத்தியலுக்கு எதிராக வலுப் பெற்று வரும் இடதுசாரி கருத்தியலுக்கான வெற்றியுமாகும்.

புவிவெப்பமாதல் பிரச்சனைக்கு அடிப்ப டையே, இயற்கை வளங்களைக் கட்டுப்பாடில் லாமல் முதலாளித்துவம் கொள்ளையடிப்பதே ஆகும்.  பிரேசிலில் உள்ள அமேசான் காடுகள் புவி வெப்பமடைதலின் வேகத்தைக் குறைக்கும் ஒரு முக்கிய கார்பன் உறிஞ்சும் களமாக இருந்து வருகிறது. உலகின் மொத்த ஆக்சிஜன் உற்பத்தி யில் 20 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆக்சிஜன் அமேசான் காடுகளில் இருந்துதான் கிடைக்கி றது. ஆனால் அமேசான் காடுகளை அழித்து, கனிம சுரங்கங்களையும், பண்ணைகளையும் உருவாக்குவதையே  பொல்சானரோ அரசு கொள்கையாக கொண்டு செயல்பட்டு வந்தது.

ஏற்கனவே லூலா ஆட்சியின் போது அமேசான் காடுகளை ஆக்கிரமித்திருந்த கார்ப்பரேட்கள் விரட்டியடிக்கப்பட்டன. அது உலகிற்கே பாதுகாப்பு அரணாக அமைந்தது.    அத னால்தான் உலகம் முழுவதும் இன்று லூலாவின் வெற்றியை உலக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்  கொண்டாடுகின்றனர். பிரேசிலில் ராணுவ சர்வா திகார பிடியிலிருந்து மக்களின் நம்பிக்கையைப் பெற்று 2003ல் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார் லூலா. 2011 வரை ஆட்சியிலிருந்த இடதுசாரி லூலா அரசு மக்களை சுரண்டலிலிருந்துமீட்டது.   

2011இல்  அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது கைக்கூலிகளைக் களமிறக்கி லூலாவின் ஆட்சியை கவிழ்த்தது. அதன் பின்னர் வந்த  டில்மா ரூசெப் ஆட்சியையும் சதியின் மூலம்  கவிழ்த்து, குறுக்குவழியில் அமெரிக்கக் கைக் கூலியான பொல்சானரோவின் ஆட்சியை நிறு வியது. லூலா 2017ல்  ஊழல் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதற்குக் கைமாறாக லூலாவிற்கு சிறைத் தண்டனை வழங்கிய நீதிபதி க்கு, வலதுசாரி  ஜனாதிபதி பொல்சானரோ தனது அமைச்சரவையில் நீதித்துறை அமைச்சர் பதவி வழங்கினார். ஆனால் இறுதியில் உண்மை வென்றது. மேல்முறையீட்டில் லூலாவிடுவிக்கப்பட்டார்.

லத்தின் அமெரிக்க நாடுகள் முழுவதும் இடது சாரி, சோசலிச அரசுகளுக்கு எதிரான அமெரிக் காவின் சதி மீண்டும் மக்கள் மத்தியில் அம்பலமாகி வருகிறது. அதன் விளைவே  கொலம்பியா, சிலி,  ஹோண்டுராஸ், பெரு, பொலிவியா, அர்ஜென்டி னா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் அமெ ரிக்க ஆதரவு, வலதுசாரி அரசுகள் அகற்றப் பட்டு, மக்கள் இடதுசாரி அரசுகளைத் தேர்வு செய்திருக்கின்றனர். இளஞ்சிவப்பலையாக விரியும்  இடதுசாரிகளின் தொடர் வெற்றி, எதிர் கால மனித குலத்தின் பாதுகாப்பிற்கான நம்பிக் கையை ஏற்படுத்தியிருக்கிறது.