headlines

img

திடீர் மின்வெட்டுக்கு ஒன்றிய அரசே காரணம்

நிலக்கரி பற்றாக்குறையால்  மின் விநியோ கத்தை அதிகரிக்க முடியாததால் கடந்த 20 ஆம் தேதி இரவில் சென்னை உள்பட பல மாவட்டங்க ளில் மின் விநியோகம் தடைப்பட்டது.  மின்வாரி யம் துரிதமாகச் செயல்பட்டு தனியாரிடம் இருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்து நிலைமை யைச் சமாளித்தது. இது தற்காலிக ஏற்பாடா கவே இருக்கமுடியும்.

தமிழ்நாடு மின்மிகை மாநிலமும் அல்ல,  தற் சார்பு மாநிலமும் அல்ல. தமிழகத்தின் மின் தேவையில் மூன்றில் இரண்டு பங்கு தனியாரிடமி ருந்தும், மத்தியத் தொகுப்பிலிருந்தும் தான் வாங் கப்படுகிறது. எனினும் பற்றாக்குறையை சமாளிக்க மாற்று ஏற்பாடு வேண்டும். தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்களுக்கு நிலக்க ரியை ஒன்றிய அரசு  ஒதுக்கீடு செய்து வருகிறது. அது பற்றாக்குறையாக இருக்கும் போது மாநில அரசே வெளிநாடுகளிலிருந்து கொள்முதல் செய்கிறது. தமிழகத்தில் ஒருநாள் மின்உற்பத்தி க்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. ஆனால் ஒன்றிய அரசு குறைந்த அளவே நிலக்கரியை ஒதுக்குகிறது. கடைசியாக நாள் ஒன்றுக்கு 32 ஆயிரம் டன் நிலக்கரியை  மட்டுமே ஒதுக்கியது.

வரும் ஜூன் மாதம் வரை கோடைக்காலம் நீடிக்கும் என்பதால் நிலைமையை சமாளிக்க அடுத்த இரண்டு மாதங்களுக்கு நிலக்கரியை இறக்குமதி செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பதாக மின்துறை அமைச்சர் கூறியுள்ளார்.   அனைத்து மாநிலங்களுக்கும் கோடைக்காலத்துக்கான மின் தேவை என்பது அதிகமாக உள்ளதால் தேவையான நிலக்கரியை ஒன்றிய அரசு வழங்கவேண்டும். 

அதேநேரத்தில் மின்பற்றாக்குறையைச் சமாளிக்கிறோம் என்ற பெயரில்  தனியார் மின்  உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவதை மாநில அரசு  தவிர்க்கவேண்டும்.  அவர்கள் ஒரு யூனிட் மின்சாரத்தை 20 ரூபாய்க்கு விற்கிறார்கள். மாநிலத்தில் ஆறு அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில்  உற்பத்தியை 90 விழுக்காடு அளவுக்கு அதிகரித்தால்  தனியாரிடம் மின்சா ரத்தை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. அரசுக்கும் பெருமளவு தொகை மிச்சமாகும்.

அனல் மின்நிலையங்களைத் தவிர சுற்றுச் சூழலைப் பாதிக்காத சூரிய மின் உற்பத்தியை அரசு ஊக்கப்படுத்தவேண்டும். தனியார் நிறு வனங்களின் மொட்டை மாடிகளிலும் தொழிற் பேட்டைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங் கள், அரசு அலுவலகங்கள் போன்றவற்றில் காலி யாக உள்ள நிலங்களிலும் சூரிய சக்தி தகடுகளைப் பதித்து மின் உற்பத்தியை அதிகரிக்கமுடியும். சில மாநிலங்களில் விவசாயத்திற்குத் தண்ணீர் கொண்டு செல்லப்படும் கால்வாய்கள் மீது சூரிய தகடுகளை நிறுவி மின்சாரத்தை உற்பத்தி செய்கி றார்கள். 

இதனால் தண்ணீர் ஆவியாவது தடுக்கப்படுவதோடு  மின் உற்பத்தியால் மின்சார மும் கிடைக்கிறது.  எனவே மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான அனைத்து விதமான மாற்று வழிகளையும் மாநில அரசு ஆராயவேண்டும். ஒன்றிய அரசும் தமிழகத்தை வஞ்சிக்காமல் தேவையான நிலக்கரியை வழங்க வேண்டும்.