headlines

img

தொலைநோக்கு இன்மையால் விளையும் தொல்லை

ஒன்றிய பாஜக கூட்டணி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் பல்வேறு துறை களும் நெருக்கடியில் சிக்கித் தவித்து வரு கின்றன. நாட்டில் அதிகரிக்கும் நிலக்கரி பற்றாக் குறை காரணமாக மின்தடை பல்வேறு மாநிலங்க ளில் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள 135 அனல் மின் நிலை யங்கள் நிலக்கரி பற்றாக்குறையால் பெரும் சிக்கலை எதிர்கொள்கின்றன. இந்தியாவில் மொத்த மின் உற்பத்தி 388 கிகா வாட். இதில் 54 சதவீதம் மின்சாரம் அனல் மின் நிலையங்கள் மூலமே கிடைக்கிறது. 

நிலக்கரி பற்றாக்குறை காரணமாக பல்வேறு மாநிலங்களில் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு மின் தடையை சந்திக்க வேண்டி யுள்ளது. இதனால் பொருளாதார மீட்சி சிக்கலா வதோடு சிமெண்ட், எஃகு உற்பத்தியும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. 

இறக்குமதியை கார்ப்பரேட் நிறுவனங்களி டம் ஒப்படைக்கத் துவங்கியதும் சிக்கலுக்கு முக்கியக் காரணமாக உள்ளது. மின் பற்றாக் குறையை பயன்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிக்கும் வாய்ப்பு உள்ளது. இதை சமாளிக்க ஒன்றிய அரசிடம் திட்டவட்டமான திட்டம் எதுவும் இல்லை.

மறுபுறத்தில் வடமாநிலங்களில் கோதுமை கிடைக்காமல் ரேசன் கடைகளில் மக்கள் அலை மோதும் நிலை உள்ளது. வேளாண் சட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதில்லை என மோடி அரசு அறிவித்த போதும், அந்த சட்டங்களை மறைமுகமாக செயல்படுத்துகிறது. இதனால் கார்ப்பரேட் முதலாளிகள் கோதுமையை வாங்கி பதுக்கி வைத்து செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி கொள்ளையடிக்க முயல்கின்றனர். இதைத் தடுக்க அரசினால் முடியவில்லை. ஏற்றுமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் மட்டும் இந்த பற்றாக்குறையை சரி செய்ய முடியாது.

கோதுமை, சர்க்கரை போன்றவற்றை வகை தொகையின்றி ஏற்றுமதி செய்ய அனுமதித்து விட்டு தற்போது கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. ஆனால் உள்நாட்டு தேவையை அரசு கணக்கில் கொள்ளவில்லை. இதனால் பதுக்கல் அதிக ரித்துள்ளது.

கோதுமை, சர்க்கரையை தொடர்ந்து அரி சிக்கும் மக்கள் அல்லாடும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்ச ரிக்கின்றனர். இதனால் அரிசி ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆனால் இது மட்டுமே பிரச்சனைக்கு தீர்வு அல்ல. 

உணவு தானிய உற்பத்தியில் ஒன்றிய அரசு கவனம் செலுத்தவில்லை. உற்பத்தியாகும் உணவு தானியங்களை கொள்முதல் செய்து மத்திய தொகுப்பிலிருந்து நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகிப்பதும் கொஞ்சம் கொஞ்சமாக கைவிடப்படுகிறது. நாட்டின் பொருளாதார பிரச்ச னைகளில் கவனம் செலுத்தாத ஒன்றிய அரசு வெற்று விளம்பரங்களிலேயே குறியாக உள்ளது.  உணவுப் பஞ்சம் ஏற்படுவதற்கு முன்னாலேயே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.