தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் வேந்தராக ஆளுநர் இருக்கக்கூடாது என்றும், மாநில முதல்வர் தான் இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இத்த கைய கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் வேந்தர் என்ற கவுரவப் பதவியில் அமர்ந்து கொண்டு பல்கலைக்கழகங்கள் அனைத்தும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள்தான் இருப்பது போல நடந்து கொள்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.
ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் தனி யார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் கள் மாநாட்டை மாநில அரசின் பங்கேற்பி ன்றி தன்னிச்சையாக ஆளுநர் நடத்துகிறார். இது முறையற்றது. அந்த மாநாடுகளில் ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையை பல்கலைக்கழகங்களில் நடை முறைப்படுத்த வேண்டும் என்று நிர்ப்பந்திக் கிறார்.
தமிழ்நாட்டில் ஒப்பீட்டளவில் உயர்கல்வி உயர்ந்திருப்பதை ஆளுநரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மிகவும் மோசமான நிலை யில் இருந்ததாகவும், அவற்றை மேம்படுத்தவே துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்தி வருவதா கவும் ஆளுநர் கூறியுள்ளார். இது ஏற்கத்தக்கதல்ல.
உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் அகில இந்திய சராசரி விகிதத்தைக் காட்டிலும் தமிழ் நாட்டில் இரண்டு மடங்கு அதிகமாக இருப்ப தாக அகில இந்திய உயர்கல்விக்கு ஆய்வு நிறு வனம் தெரிவிக்கிறது. அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகள் உயர்கல்வி க்குசெல்லும் போது அவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 உத வித்தொகை வழங்கப்படுவது நல்ல முன்னேற் றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் மாண வர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்ற மாநில அரசின் அறிவிப்பு உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தும் வாய்ப்பு உள்ளது.
இது ஒருபுறமிருக்க, தமிழக பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் சுதந்திரப் போராட்ட தியாகி களின் வரலாறு மறைக்கப்படுவதாக ஆளுநர் கூறியுள்ளார். உதாரணமாக வீரமங்கை வேலு நாச்சியார் வரலாறு கற்பிக்கப்படுவதில்லை என் கிறார். குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில் வீரமங்கை வேலு நாச்சியார் உள்ளிட்ட தமிழக தியாகிகளின் உருவப்படங்களைக் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.
அப்போது ஆளுநர் வாய் திறக்கவில்லை. பிற மாநில பாடத்திட்டங்களில் தமிழக தியாகிக ளின் வரலாறு இருட்டடிப்பு செய்யப்படுவது குறித்தும் இவர் கவலைப்படுவதில்லை. வள்ளு வர் துவங்கி வள்ளலார் வரை தேவையில்லாத தைப் பேசும் இவர் தமிழ்நாட்டிற்கு தேவை இல்லாத ஒருவராகவே இருக்கிறார்.