2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை யை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதன்படி, பல்வேறு துறைகளில் பணியிடங்களை நிரப்பு வதற்காக அறிவிக்கை வெளியாகும் தேதி, தேர்வுகள் நடைபெறும் தேதிகள் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. தேர்வு அட்டவணையை வெளியிடுவதும், அதிலும் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் தேர்வுகள் நடத்தப்படுவதும் வரவேற்க வேண்டியதேயாகும். தேர்வுகளை நடத்துவது மற்றும் முடிவுகளை அறிவிப்பதில் தற்போது பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
2023 தேர்வுக்கான அட்டவணையில் பல்வேறு துறைகளில் நிரப்பப்படும் பணியிடங்களின் எண்ணிக்கையும் குறிப்பிடப்பட்டுள்ளது. அனை த்தையும் கூட்டிப் பார்த்தால் வெறும் 1,754 பணி யிடங்கள்தான் வருகின்றன. நான்காம் பிரிவிற் கான அறிவிக்கை நவம்பர் 2023ல் வரும் என்று குறிப்பிட்டுள்ளனர். எவ்வளவு பணியிடங்கள் நிரப்பப்படும் என்பது அதில் இல்லை. அப்படியே நவம்பரில் அறிவிக்கை வந்தாலும் 2024ல்தான் தேர்வு நடத்தப்படும். இதுவும் தேர்வு அட்டவணை யில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதன்படி பார்த்தால், வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் குரூப் 1, 2, 2ஏ மற்றும் 4 ஆகிய பணியிடங்களுக்கான தேர்வுகள் 2023 ஆம் ஆண்டில் நடக்கப் போவதில்லை. வேளாண்மைப் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு நடத்தப்படும் உதவி வேளாண்மை அலுவலர் பணியிடத் திற்கான தேர்வு போன்றவை பெரும் அளவில் எதிர்பார்க்கப்பட்டவையாகும். இவையெல்லாம் இடம்பெறாததால் பெரும் ஏமாற்றத்தையே இந்தத் தேர்வு அட்டவணை தந்துள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்கள் என்ற பெயரில் தனியார் நிறுவனங்களுக்கு ஆட்களைத் திரட்டும் வேலைதான் நடக்கிறது. பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் நான்கு இலக்க மாத ஊதியம்தான் என்பது ஊரறிந்த உண்மையாகும்.
மறுபுறத்தில், அரசு வேலைவாய்ப்பு அலுவல கங்களில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. வேலைகளைத் தர வேண்டிய அலுவலகங்கள், பயிற்சி மையங்களாக மாறியிருப்பதே அவலம்தான் என்றாலும், மாநி லம் முழுவதும் இந்த வகுப்புகள் நல்ல வகையில் நடத்தப்படுகின்றன. அண்மையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வில் அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பயின்றவர்கள் சுமார் 1,300 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
“ஆஹா.. அபாரம்” என்று சொல்வதற்கு முன்பாகவே, தேர்வு அட்டவணை வாயை மூடச் செய்து விட்டது. ஏராளமான பணியிடங்கள் காலி யாக இருக்கும் நிலையில், தேர்வு நடத்தாமல் இருப்பது எந்தவிதத்திலும் நியாயமானதல்ல. மாநில அரசு உடனடியாக இதில் தலையிட்டு, இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ள மனக்கவலை யைப் போக்கும் வகையில், பணியிடங்கள் நிரப்பப் படும் என்றும், அதற்குரிய வகையில் தேர்வு அட்ட வணை மாற்றப்படும் என்று அறிவிப்பதே பொருத்தமாக இருக்கும்.