தமிழ்நாடு அரசின் சார்பில் ‘தமிழ்நாடு நாள்’ விழா திங்களன்று கோலாகலமாக கொண்டா டப்பட்டுள்ளது.அறிஞர் அண்ணா 1967ஆம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்ற பிறகு ஜூலை 18 அன்று சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த நாள் ‘தமிழ்நாடு நாள்’ விழாவாக கொண்டாடப்படுகிறது.
சென்னை கலைவாணர் அரங்கில் நடை பெற்ற விழாவில் இலக்கிய விருதுகள், பரிசுகள் வழங்கப்பட்டதோடு, கலை பண்பாட்டுத் துறை சார்பில் 20 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு மாநிலம் உருவானது. சென்னை மாகாணம் பிரிக்கப்பட்டு பல பகுதிகள் மொழிவழியாக கேரளம், ஆந்திரா, கர்நாடகம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட பிறகும் தமிழ்நாடு மாநிலம் சென்னை மாகாணம் என்றே அழைக்கப்பட்டது.
மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்படுவ தற்காகவும், தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டவும், பொதுவுடைமை இயக்கம் நடத்தி வந்த அயர்வற்ற போராட்டம் நினைவு கூரத்தக்கது.
விடுதலை பெறும் இந்தியாவில் அமைக்கப் படும் மாநிலங்கள் மொழிவழியாகவே அமைக் கப்பட வேண்டுமென்று முதன் முதலில் குரல் எழுப்பியர்கள் கம்யூனிஸ்ட்டுகள். இந்த நிலை பாட்டில் முன்பின் முரணின்றி இன்று வரை பய ணிப்பவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்.
மாநிலங்கள் சீரமைப்புக்காக அமைக்கப்பட்ட குழுக்களில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தரப்பட்ட மனுக்களில் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்ப டுவதே பொருத்தம் என அழுத்தமாக வாதிட்டது கம்யூனிஸ்ட் இயக்கம். அப்போதுதான் மொழிவழி தேசிய இனங்களின் தனித்தன்மையை, மொழி உரிமையை பாதுகாப்பதோடு, இந்திய ஒருமைப் பாட்டையும் பாதுகாக்க முடியும் என கம் யூனிஸ்ட்டுகள் அழுத்தமாக வலியுறுத்தினர்.
சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டக்கோரி விடுதலைப் போராட்ட வீரர் விருதுநகர் தியாகி சங்கரலிங்கனார் உண்ணா விரதம் இருந்தபோது அவருக்கு துணை நின்றவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். இதனால்தான் அவர் உயிர் நீத்தப் பிறகு தன்னுடைய உடலை கம்யூனிஸ்ட்டுகளிடம் ஒப்படைக்க வேண்டும் என உயில் எழுதினார். அதன்படி கம்யூனிஸ்ட்டுகள் அவருடைய உடலை பெற்று தகனம் செய்தனர்.
தமிழ்நாடு என பெயர் சூட்டக்கோரி நாடாளு மன்றத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவர் பி.ராமமூர்த்தி தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் விவாதத்திற்கு வந்தபோது சிறை யில் இருந்ததால் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் பூபேஷ் குப்தா தீர்மானத் தின் மீது பேசினார். அறிஞர் அண்ணா உள்ளிட் டோர் ஆதரித்துப் பேசினர் என்பது அழிக்க முடி யாத வரலாறு.
ஒன்றிய ஆட்சியாளர்கள் மொழிவழி மாநி லங்களைச் சிதைக்கத் துடிக்கின்றனர். தமிழ் நாட்டில் சிலர் மாநிலத்தைப் பிரிக்க வேண்டும் என் கின்றனர். இந்நிலையில் மொழிவழி அமைந்த தமிழ்நாட்டைப் பாதுகாக்கச் சூளுரைப்போம்.