இந்தியா தங்கப்பதக்கம் ஜெயிச்சதெல்லாம் பெண்ணாலே என்கிற பெருமையை தேடித் தந்த புகழ்மிகு விளையாட்டு வீராங்கனைகள் தற்போது தலைநகரின் சாலைகளில் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதர வாக பெண்கள் அமைப்புகள், விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள் அணிஅணியாக வந்து தங்களின் ஒருமைப்பாட்டை தெரிவிக்கின் றனர்.
ஆனால் இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் தேசிய மல்யுத்த கூட்டமைப்பின் தலை வர் பிரிஜ் பூஷன் சரண்சிங்கோ, விவசாயிகள் தவறு செய்கிறார்கள் என்றும், விசாரணை முடிவு வருவதற்குள் அவசரப்படுகிறார்கள் என்றும் கூறியிருக்கிறார். யார் செய்வது, யார் செய்தது தவறு என்பதை நாட்டு மக்கள் கவனித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்.
அதுமட்டுமின்றி, இந்த போராட்டத்தை இது மற்றொரு சாகின்பாக் போராட்டம் என்றும், துக்டே துக்டே கும்பல் என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார். போராட்டக்காரர்களின் இலக்கு பாஜகவும் மோடியும்தான் என்றும், மோடி - அமித்ஷா அல்லது ஜேபி நட்டா கூறினால் பதவி விலகலாம் என்றும் கூறியுள்ளார்.
அப்படியானால், பிரிஜ்பூஷனுக்கு ஆதரவாக இருப்பது ஒன்றிய அரசும், ஆளும் பாஜகவும் என்பது தெளிவாக தெரிகிறது அல்லவா? பிரத மர் மோடியும் நூறாவது மனதின் குரல் நிகழ்ச்சி யின் போது, எங்களது மனதின் குரலை பிரதமர் கேட்க மாட்டாரா? என்று கேள்வி எழுப்பினார்கள் மல்யுத்த வீராங்கனைகள். ஆனாலும் அதற்கும் நல்ல விளைவு ஏதும் ஏற்படவில்லை.
பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கியவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவரை பாது காப்பதற்கு ஒன்றிய அரசும், தேசிய ஒலிம்பிக் கமிட்டியும் முயல்கின்றன. போராடுவது தேசிய அவமானம் என்று ஒலிம்பிக் கமிட்டியின் தலை வரான பி.டி.உஷா கூறுகிறார். ஒரு சிறுமி உட்பட நான்கு வீராங்கனைகளிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டது அல்லவா அவமானம் அத்த கைய குற்றத்தில் ஈடுபட்டவரை பாதுகாப்பது அல்லவா அவமானம்?
பேட்டி பச்சாவோ என்று கூறுவது வெறும் கூச்சல்தான். ஆனால் பெண்களுக்கு பாஜக ஆட்சியில் பாதுகாப்பே இல்லை என்பதும் பாலியல் பலாத்காரங்களில் ஈடுபட்டோரை பாது காப்பதற்கு பாஜக ஒருபோதும் வெட்கப்படுவ தில்லை என்பதும் நாடறிந்ததே.
உ.பி.,மாநிலத்தில் உன்னாவோ சிறுமி பாலி யல் குற்றவாளி குல்தீப்செங்காரை பாதுகாக்க முயற்சித்தது யோகி அரசு. ஆயினும் பெரும் போராட்டத்திற்குப் பிறகும் உயர்நீதிமன்றம் தலையிட்டதாலும் தான் பின்னர் கைது செய்யப்பட்டார். அதுபோல் இப்போதும் பெரு மளவிலான போராட்ட வீச்சால் மட்டுமே தற்போ தைய பாலியல் அத்துமீறல் குற்றம் சாட்டப் பட்டுள்ள பிரிஜ்பூஷனை கைது செய்ய வைக்க முடியும். ஏனெனில் எப்ஐஆர் பதிவு செய்வதற்கே உச்சநீதிமன்றம் செல்ல வேண்டியிருந்தது. அதனால் இந்த நிகழ்வில் பெரும் போராட்டமே இந்த இளம் பெண்களுக்கு நீதி கிடைக்கச் செய்திடும்.