இந்தியாவில் 24 மாநிலங்களைச் சேர்ந்த 67 கோடி பேரின் தனிப்பட்ட ரகசிய தகவல்களை திருடிய வழக்கில் ஹைதராபாத்தைச் சேர்ந்த வினய் பரத்வாஜ் என்பவர் சைபர் கிரைம் காவல் துறையி னரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய மக்க ளின் தனிப்பட்ட தகவல்கள் திருடி விற்கப்படுவது குறித்து அவ்வப்போது செய்திகள் வெளியான போதும் பெருமளவில் நடைபெற்ற இந்த மோசடி நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஒரு தனிநபர் மட்டும் இந்த திருட்டில் ஈடுபட்டி ருக்க முடியாது. நாடு முழுவதும் ஒரு பெரும் வலைப்பின்னல் உருவாக்கப்பட்டிருக்க வேண் டும் என்பது உறுதி. இதுவரை கிடைத்துள்ள தக வல்களின்படி நான்கு பெரும் நகரங்களில் பல ஊழியர்களை பணியமர்த்தி இந்த திருட்டுக் கும்பல் செயல்பட்டுள்ளது. டி மார்ட், பான் கார்டு, அமேசான், நெட் பிலிக்ஸ், யு டியூப், பே டிஎம், போன் பே உள்ளிட்ட நிறுவனங்களிலிருந்தும் ராணுவ அதிகாரிகள், முக்கிய அரசியல் பிரமுகர் கள், பள்ளி மாணவர்கள் ஆகியவர்களின் தனிப் பட்ட தகவல்களை திருடி திரட்டி 104 பிரிவுகளாக விற்பனை செய்துள்ளனர்.
இந்த திருட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கோடி பேரின் தகவல்களும் அடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஆதார் கார்டு முறையை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தி, கட்டாயப்படுத்தியபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதுகுறித்து கேள்வி எழுப்பியது. தனிப்பட்ட நபர்களின் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடும் என்று எச்சரித் தது. அதுதான் தற்போது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
ராணுவ ரகசியங்களும் கூட இவ்வாறு திருடப் பட்டிருக்கலாம் என்று கூறப்படுவது அதிர்ச்சிய ளிப்பதாக உள்ளது. நாட்டின் பாதுகாப்பே கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பிரதமரின் கல்வித்தகுதி குறித்த சான்றிதழை வெளியிட உத்தரவிடக்கோரி தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தை அணுகிய போது, பிரதமரின் அந்தரங்கம் பாதிக்கப் படும் என்று கூறி அந்த மனு தள்ளுபடி செய்யப் பட்டதோடு வழக்கு தொடுத்த கெஜ்ரிவாலுக்கு நீதி மன்றம் அபராதம் விதித்தது. பிரதமரின் கல்வித் தகுதி குறித்து முரண்பட்ட தகவல்கள் சொல்லப் பட்ட நிலையில்தான் இந்த வழக்கு தொடுக்கப் பட்டது. ஆனால் அதற்கு அபராதம் விதித்தது நீதிமன்றம்.
ஆனால் இந்திய மக்களின் தனிப்பட்ட தக வல்கள் கடைச்சரக்காக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படுவதற்கு யார் பொறுப்பு? இதற்கு ஒன்றிய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இவ் வாறு திருடப்பட்ட தகவல்கள் வணிக, விளம்பர நோக்கங்களுக்காக மட்டுமின்றி, வேறு எதற்கெல் லாம் பயன்படுத்தப்படுகிறது என்பது ஆய்வுக்குரி யது. தனிப்பட்ட ஒரு நபர் தன்னுடைய தகவல் களை பாதுகாத்துக் கொள்வது அவருடைய அடிப் படை உரிமை. ஆனால் அது தற்போது விற்பனைச் சரக்காக மாற்றப்பட்டுவிட்டது. இதில் தொடர்பு டைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, இத்தகைய திருட்டுகளை முற்றாகத் தடுக்க உரிய சட்டப்பூர்வ, தொழில் நுட்ப முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.