தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை தங்கள் ஆட்சிக் காலத்தில் நடத்திவிடக்கூடாது என்பதில் அதிமுக அரசு திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறது. உச்சநீதிமன்றம் பல முறை உத்தரவிட்டும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தா மல் சாக்கு போக்கு கூறிவந்தவர்கள் வேறு வழியே இல்லை என்ற நிலையில் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத ஒரு நடை முறையாக கிராமப்புற உள்ளாட்சி அமைப்புக ளுக்கு மட்டும் தேர்தல் தேதிகள் அறிவிக்கப் பட்டுள்ளன. மாநகராட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்பைக் கூட வெளியிட மாநில அரசும், அதன் சொல்படி நடந்து கொள்ளும் மாநிலத் தேர்தல் ஆணையமும் தயாராக இல்லை.
நாடாளுமன்ற சட்டமன்றத் தேர்தல்களைப் பொறுத்தவரை தமிழகத்தில் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறும். இதற்கான நிர்வாகக் கட்டமைப்பு இருந்தபோதும் உள்ளாட்சித் தேர்தலை பல கட்டமாக நடத்த வேண்டிய அவ சியம் என்ன? குளறுபடியின் குவியலாகவே உள் ளாட்சித் தேர்தல் அறிவிப்பு அமைந்துள்ளது.
மறுபுறத்தில் புதிய மாவட்டங்கள் உருவாக்கு வது குறித்த அறிவிப்புகள் வெளியாகி உடனுக்கு டன் துவக்க விழாக்களும் நடைபெறுகின்றன. ஆனால் புதிய மாவட்டங்களின் அடிப்படையில் உள்ளாட்சி வார்டுகள் வரையறை செய்யப்பட்டு தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால் பல்வேறு குளறுபடிகளும்,முறைகேடுகளும் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து கேட்டால் தற்போதைக்கு பழைய நிலையே தொடரும் என்று பொருத்த மில்லாத காரணத்தை மாநில அரசு கூறுகிறது. இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றால் தேர்தல் நடத்த தடை வரக்கூடும். அதையே காரணம் காட்டி தேர்தலை மேலும் ஒத்திவைத்துவிடலாம் என்பதே மாநில அரசின் நோக்கமாக இருக்க லாம் என்ற குற்றச்சாட்டை எளிதாக ஒதுக்கிவிட முடியாது. அதேபோல மாநகராட்சி மேயர், நகர்மன்றத் தலைவர், பேரூராட்சித் தலைவர் போன்ற பதவி களுக்கு நேரடி தேர்தல் முறையை ரத்து செய்து மறைமுகத் தேர்தலுக்கு மாநில அரசு உத்தர விட்டதும் உள்நோக்கம் கொண்டது ஆகும். கடு மையான குதிரை பேரத்திற்கு வழி வகுக்கக் கூடிய இந்த நடைமுறை உள்ளாட்சி ஜனநாய கத்தையே கேலிக்கூத்தாக்குவது மட்டுமல்ல, உள்ளாட்சி நிர்வாகத்தையும் படுகுழியில் தள்ளு வதாக அமையும்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயக்கமில்லை என்றும், தேர்தலை சந்திக்க தயங்கவில்லை என்றும் கூறிக்கொண்டே தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கான வேலைகளையே அதிமுக அரசு செய்து வருகிறது. ஏற்கெனவே பல வழக்குகள் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தாக்கல் செய் யப்பட்டுள்ள நிலையில் மாநில தேர்தல் ஆணை யத்தின் அறிவிப்பு தேர்தலை நடத்துவதற்கா அல்லது நடத்தாமல் இருப்பதற்கா என்ற ஐயப்பாடே எழு கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஏற்கெனவே சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைகளைக் களைந்து உள்ளாட்சித் தேர்தலை ஒரே நாளில் நடத்த முன்வருவதே பொருத்தமாக இருக்கும்.