headlines

img

பிரதமர் மோடியின் தீவிரம் யாருக்காக?

சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது என்றும், எட்டு ஆண்டு களில் வனப்பரப்பு அதிகரித்துள்ளது என்றும் பிரதமர் மோடி ஞாயிறன்று புதுதில்லியில் நடந்த நிகழ்ச்சியில் மிகவும் பெருமிதமாக கூறியுள்ளார். 

மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் பருவநிலை மாற்றத்தில் இந்தியாவின் பங்கு குறைவு என்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தனது அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்று பெட்ரோலில் எத்தனால் கலப்பது பத்து சதவீதமாக அதிகரித்துள்ள தாகவும் கூறியிருக்கிறார். அத்துடன் வனப்பரப்பு மிகவும் அதிகரித்துள்ளதாகவும், மண் வளத்தை  பாதுகாப்பதற்காக விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கியுள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டிருக்கிறார்.

இதுவரையில் விவசாயிகள் மண்ணின் தன்மை பற்றி தெரிந்துகொள்ளாமல் இருந்தது போலவும் இவரது ஆட்சி வந்தபிறகே அத்தகைய வசதியை ஏற்படுத்தி கொடுத்திருப்பது போலவும் பிதற்றியிருக்கிறார். முந்தைய ஆட்சியாளர்கள் நீண்ட காலத்திற்கு முன்பாகவே பசுமைப் புரட்சி திட்டத்தின் போது அறிமுகப்படுத்தியதை எல்லாம் மறைத்துவிட முயல்கிறார். 

வனப்பகுதிகளை பாதுகாப்பது, அதிகரிப்பது என்ற பெயரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறை களையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு அவரது கார்ப்பரேட் நண்பர்கள் பயனடைவதற்காகவே  வனப் பகுதிகளையும் துறைமுகங்களையும் தாரை வார்க்கும் திட்டத்தை இவரது அரசு செயல்படுத்திக் கொண்டிருப்பதை மறைத்துவிடவே இவ்வாறு நீட்டி முழக்கியிருக்கிறார்.

தமிழகத்தின் காட்டுப்பள்ளி துறைமுகம் அதானியின் நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்படுவ தற்காக அந்தப் பகுதி மீனவர்கள் மற்றும் விவசாயிகள், மண் வளம், கடல் வளம் பாதிக்கப்படுவது பற்றி கவலை கொள்ளாமலேயே ஒன்றிய அரசு நடந்து கொண்டிருக் கிறது என்பது மக்கள் அறியாதது அல்ல.

நதிக் கரைகளில் மரம் வளர்த்தல் மூலம் வனப் பரப்பை அதிகரித்துள்ளதாக கூறும் பிரதமர் அருகில் நின்றிருந்த சத்குரு ஜக்கி வாசுதேவால் அவரது ஆசிரமம் மற்றும் ரிசார்ட் பகுதிகளுக்காக அழிக்கப் பட்ட வனப்பகுதிகள் பற்றி சொல்லாதது ஏன்? அதனால் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்கள் பற்றி வாய் திறவாதது ஏன்?

உத்தரகண்ட் மாநிலத்தில் முன்பு நடந்த நிலச்சரி வுக்கு காரணம் அங்கு சுற்றுச்சூழல் விதிகள் ஏதும் கடைப் பிடிக்காதது தானே. இதுபோல் அரசின் நிலக்கரி சுரங்கங்களை கூட அதானி மற்றும் அம்பானி வகையறாக்களுக்கு கொடுத்திருப்பது தான் சுற்றுச் சூழலை பாதுகாப்பதன் லட்சணமா?  நிலக்கரிப் பயன்பாட்டைக் குறைப்பதற்கு எடுக்கும் தீவிர நடவடிக்கையோ? 

மொத்தத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதி ராக நடந்து கொண்டு பாதுகாப்பதாக ஓங்கி பேசுவது இவர்களது வழக்கமான பாணியான பொய்யை மெய்போல உரக்கச் சொல்வதன் ஒரு பகுதி தானே. ஆனால் உண்மையான சுற்றுச்சூழல் ஆர்வ லர்கள் இவர்கள் தரும் புள்ளி விபரங்களை  தவறு என்று ஏற்கனவே அம்பலப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.