அதிகரித்து வரும் பருவநிலை மாற்றம் இப்பூவுலகின் இருப்பிற்கே அச்சுறுத்தலை ஏற் படுத்தியிருக்கிறது. ‘’லாபத்திற்காகவே உற்பத்தி’’ என மூலதனம் முன்னெடுக்கும் பொருள் உற்பத்தி முறையில் வெளியாகும் கரியமில வாயுக்களால் புவிவெப்ப மயமாதல் பன்மடங்கு அதிகரிக்கிறது. இந்த ஆபத்திலிருந்து மனித சமூகம் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டு மெனில், முதலில் பூவுலகைக் காக்கும் பணியை முன்னெடுக்க வேண்டும்.
பூமியின் மேற்பரப்பில் உள்ள வளிமண்டலம் தான் பூமியின் வெப்ப பாதுகாப்பு உறையாக இருக்கிறது. சூரிய ஒளிக்கதிர்களை உள்ளே அனுமதிக்கிறது. அதேபோல் பூமியிலி ருந்து விண்வெளிக்குத் திரும்ப அனுப்பப்படும் அகச்சிவப்பு கதிர்களைத் தடுத்து நிறுத்தி, அனைத்துத் திசைகளிலும் மீண்டும் உமிழ்கிறது. கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன் போன்ற பல்தனிம மூலக்கூறுகள் இந்த வேலையைச் செய்கின்றன. இதன் காரணமாகவே பூமியின் சராசரி வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸாக இருக்கிறது.
இந்த செயல்முறை நடைபெறாவிட்டால் பூமி யின் வெப்பநிலை மிகக் கடுமையாகக் குறைந்து உயிரினங்கள் வாழமுடியாத நிலை உருவாகும். பூமியின் மேல் விழும் புறஊதாக்கதிர்களை தடுக்க முடியாமல் பேரழிவு ஏற்படும். ஆனால் முதலாளித்துவத்தின் லாபவெறி கொண்ட உற்பத்தி முறையால் பூமியின் இந்த சராசரி வெப்பநிலையில் 1.5 டிகிரி செல்சியஸ் உயர்ந்தி ருக்கிறது. இதனால் பல்வேறு விளைவுகளை உலகம் சந்தித்து வருகிறது. இது 2 டிகிரி செல்சிய ஸாக உயர்ந்தால் பல்வேறு பேரழிவுகளை உலகம் சந்திக்கும், உயிரினங்களின் இருப்பே கேள்விக் குறியாகும்.
பூமியின் சூழல் வளங்கள் அதாவது நிலம், வளிமண்டலம், கடல்கள் ஆகியவை ஒட்டு மொத்த உலகிற்கும், உயிரினங்களுக்கும் பொது வானவை. ஆனால் வளர்ந்த நாடுகள் உலகப் பொது வளங்களில் பெரும்பகுதியை ஆக்கிர மித்து வைத்திருக்கின்றன. மக்கள் தொகையில் 18 சதவிகிதமாக உள்ள இந்த நாடுகள் மட்டும் 60 சதவிகித பசுங்குடில் வாயுக்களை வெளியிடு கின்றன. முதலாளித்துவம் எப்போதும் அறி வியல்-தொழில்நுட்ப வளர்ச்சியை லாப நோக்கில் மட்டுமே முன்னெடுக்கிறது. இது இயற்கை அழிவிற்கே வழிவகுக்கும். அதனால் ஒருபோதும் லாப நோக்கத்தை விட்டொழித்து சமூக நோக்கத்தை முன்னெடுக்க முடியாது.
அதனை கொரோனா பெருந்தொற்றின் போதும் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. மனித உயிர்களை விட கொரோனா மருந்தின் லாபத் திற்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டது. அதற்கு நேர்மாறாக சோசலிசத்தை முன்னெடுக்கும் நாடுகள் மனித உயிர்களுக்கே முன்னுரிமை அளித்தன. லாபத்திற்கான உற்பத்தி என்பதற்கு மாறாக மனிதத் தேவைக்கான உற்பத்தி என்பதை மையமாகக் கொண்டு இயங்கும் சோசலிச சமூக அமைப்பால் மட்டுமே, மனித சமூகத்தையும், இப்பூவுலகையும் பாதுகாத்திட முடியும்.