headlines

img

தடுப்பூசியும்... லாபமும்...

 உலகளாவிய கொரோனா பாதிப்பு வரலாறு காணாத உச்சநிலையை எட்டிக் கொண்டிருக்கும் வேளையில், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி  கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகம் முழுவதும் மருத்துவ விஞ்ஞானிகள் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர். இந்நிலையில் தடுப்பூசியை யார் முதலில் கண்டுபிடிப்பது, வெற்றிகரமாக மனிதர் களுக்கு சோதிக்கப்பட்டு, மருத்துவச் சந்தைக்கு அளிப்பதற்கான காப்புரிமையை யார் முதலில் கைப்பற்றுவது என்பதில் உலக பெரும் கார்ப்பரேட் முதலாளிகள் லாபவெறியோடு களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.  உலக சுகாதார அமைப்பின் விபரங்களின் படி, தற்சமயம் 160க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள், கொரோனாவுக்கு எதிராக உருவாக்கப்பட்டு வரு கின்றன; இதில் பல நாடுகளின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்; 160ல் 23 தடுப்பூசிகள் மனிதர்கள் மீதான மருத்துவ சோதனை என்ற கட்டத்தை எட்டியுள்ளன. மொத்த பரிசோதனையில் உள்ள தடுப்பூசிகளில் 26 தடுப்பூசிகள் ரஷ்யாவால் உரு வாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அதில் இரண்டு தடுப்பூசிகள் வெற்றிபெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. சீனா, 8 தடுப்பூசிகளை உருவாக் கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதில் 2 தடுப்பூசி கள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன. இந்த விபரங்களின்படி, கொரோனா தடுப்பூசி உரு வாக்குவதில் ரஷ்யாவும், சீனாவும் முன்னிலை யில் உள்ளன என்பது உறுதியாகிறது. இந்தப் பின்னணியில்தான், மேற்கண்ட இரு நாடுகளுக்கும் எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியம் அவதூறுகளை கட்டவிழ்த்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளது மருத்துவ விஞ்ஞானிகளின் தடுப்பூசி உருவாக்கத்திற்கான தரவுகளை யெல்லாம், ரஷ்யா தனது இணைய தள ‘திருடர் களை’ பயன்படுத்தி, மேற்கண்ட நாடுகளின் கணினி பாதுகாப்பை உடைத்து திருடித்தான் தடுப் பூசி தயாரிப்பதில் முன்னிலை அடைந்துள்ளது என்று அமெரிக்க நிர்வாகம் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறது, இந்த குற்றச்சாட்டை ரஷ்ய  ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் உடனடி யாக மறுத்துள்ளார்.

கொரோனா பரவல் தடுப்பிலும் சரி, மக்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சையை உறுதிப்படு த்துவதிலும் சரி, அப்பட்டமாக தோல்வியடைந் துள்ள அமெரிக்க நிர்வாகம், இந்த நெருக்கடியை வெற்றிகரமாக எதிர்கொண்டு வரும் சீனாவை யும் ரஷ்யாவையும் குறி வைத்து குற்றம்சாட்டு வது, எப்படியேனும் தடுப்பூசியை முதலில் தயாரித்து தனது நாட்டின் மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல; மாறாக  இந்த உலகமே தற்போது ஒரு தடுப்பூசியை எதிர் நோக்கி காத்திருக்கும் நிலையில், இதை மிகப்பிரம்மாண்டமான லாபத்தைக் குவிப்பதற் கான வர்த்தகமாக மாற்றி ஒட்டுமொத்த உலக மக்க ளிடமிருந்தும் கொள்ளையடிப்பதற்கு அமெரிக்க பெருமுதலாளிகள் விரும்புகிறார்கள். அதற்கு தடுப்பூசிக்கான காப்புரிமையை அவர்கள் பெற்றாக வேண்டும். ஆனால் தடுப்பூசியை தயாரிப்பதில் அமெரிக்காவைவிட ரஷ்யா முன்னிலையில் இருக்கிறது. அதனால்தான் ரஷ்யாவின் மீது ஆத்திரத்தைக் கொட்டுகிறார்கள். மனித உயிர் களைவிட முதலாளித்துவத்திற்கு லாபமே முக்கியம் என்பது தடுப்பூசியிலும் அப்பட்டமாக வெளிப்படுகிறது.