headlines

img

காசாவின் துயரம்

காசாவில் 10 மாத குழந்தை  போலியோவால் பாதிக்கப்பட்டு கால்கள் முடங்கிப்போனதை உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. காசாவில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக போலியோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது மிகுந்த வேதனையளிப்பதாக ஐநா தெரிவித்துள் ளது. போலியோவுக்கு அது பாலஸ்தீன குழந் தையா அல்லது இஸ்ரேல் குழந்தையா என வேறு படுத்தி பார்க்கத்தெரியாது. உரிய காலத்திற்குள் சொட்டு மருந்து போடவில்லை என்றால் இளம் குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டு  கால்கள் செயல்படாமல் போய்விடும். 

பொதுவாக ஆண்டுக்கணக்கில் போர் நடை பெறும் நாடுகளில் கூட போலியோ போன்ற முக்கியமான தடுப்பு மருந்து செலுத்தும் பணி நிறுத்தப்படாது. காரணம் அது குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் சம்மந்தப்பட்டது. காசா மீது இஸ்ரேல் படைகள் நடத்திவரும் மனிதத் தன்மை யற்ற தாக்குதல்கள் காரணமாக ஆயிரக்கணக் கான குழந்தைகள் உட்பட 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு புலம் பெயர்ந்துள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு இடையே கழிவு நீர் சுதந்திரமாக ஓடுகிறது.  ஒரு கழிப்பறையை சுமார் 600 பேர் பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. தொற்றுநோய்களின் பிறப்பிட மாக காசா மாறிவருகிறது.

இந்த துயரமான தருணத்தில் போலியோ சொட்டு மருந்து செலுத்த முடியாத காரணத்தால் பாலஸ்தீனத்தில் ஒரு குழந்தையின் கால்கள் முடங்கிப்போனது மிகவும் வேதனையான ஒன்றாகும்.  

போலியோ சொட்டு மருந்து செலுத்தும் பணியை தற்காலிகமாக நிறுத்துவது அல்லது தாமதப்படுத்துவது குழந்தைகளிடையே போலி யோ அபாயத்தை அதிகரிக்கும். காசாவில் போர் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பாக தங்குவதற்குக்கூட இடமில்லை. போலியோ முகாம் நடத்துவதற்கான சூழலும் இல்லை. எல்லா இடங்களின் மீதும் இஸ்ரேல் தாக்குதலை நடத்துகிறது. காஸாவில் போலியோ பாதிப்பு ஏற்பட்டுள்ள தகவல் அறிந்து  இஸ்ரேலின் மிகவும் புகழ்பெற்ற தொற்று நோயியல் நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார நிபுணர்கள் போர் நிறுத்தத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் காசாவில் இனப் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சர்வதேச நீதி மன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் வழக்கு தொடர்ந்துள்ளன. இருப்பினும் உலக வரை படத்தில் பாலஸ்தீனம் என்ற ஒரு நாடு இருந்த தாக  சுவடு கூட இருக்கக்கூடாது என இஸ்ரேல்  மூர்க்கத்தனமாக செயல்படுவதால்  அப்பாவி குழந்தைகளின் எதிர்காலம் முடங்கிப் போயுள்ளது.