headlines

யாவரும் பப்ளிஷர்ஸ் நடத்தும்  புதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி-2020

புதிய படைப்பாளர்களைக் கண்டுபிடிப்பது, படைப்புத் திறனை ஊக்குவிப்பது, படைப்பு வெளியை விரிவடையச் செய் வது, வாசிப்புச் சூழலை வளர்த்தெடுப்பது ஆகிய நோக்கங்களை
பிரதானமாக முன்வைத்து இந்தப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகள்
இந்தக் குறுநாவல் போட்டி யில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். ஒரு நபருக்கு ஒரு குறுநாவல் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. குறுநாவலின் அளவு குறைந்தபட்சம் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வார்த்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். குறுநாவலை மின்னஞ்சலில் யூனிகோட் வடிவத்தில் மட்டுமே (WORD.DOC)–ல் அனுப்ப வேண் டும். கையெழுத்து பிரதி மற்றும் பிடிஎஃப் படிவம் ஏற்றுக்கொள்ள ப்பட மாட்டாது. 10 குறுநாவல்கள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொன்றுக்கும் ரூ.10,000 பரிசளிக்கப்படும் .
மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி  puthumaipithan.award @gmail.com  படைப்பினை அனுப்புவதற்குக் கடைசி நாள் 31.7.2020. 

 

 

;