ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்க மறுத்து பேட்டி அளித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் வேறு வழியில்லாமல் மழை, வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆய்வுக்கு வந்தார்.
வந்தவர் வந்த வேலையை மட்டும் பார்க்கா மல் அவருக்கு தேவையில்லாத வேலைகளிலும் ஈடுபட்டார். ஒரு கோவிலுக்கு அவர் சென்ற போது சாமி ஊர்வலம் வரும் பாதை சீரில்லாமல் இருப்பதை சிலர் சுட்டிக்காட்டினர். இதை மாநில அரசின், அறநிலையத்துறையின் கவனத்திற்கு அவர் கொண்டு வந்தது பொருத்தமானது.
அவர் சுட்டிக்காட்டிய குறை உடனடியாக சரி செய்யப் பட்டுள்ளது. இதுகுறித்த விவாதத்தின் போது காணிக்கை யை உண்டியலில் போடாதீர்கள் அர்ச்சகரு டைய தட்டில் போடுங்கள் என்று ஆவேசமாக அவர் கூறிய காட்சியின் காணொலி வெளியா னது. ஒன்றிய நிதி அமைச்சர் தன்னுடைய பொறுப்புக்கு பொருத்தமில்லாத வகையில் கோவில் உண்டியலில் காணிக்கையை போட வேண்டாம் என்று கூறினார். இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உரிய பதில் அளித்துள்ளார். பாஜகவைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது அறநிலையத்துறையை கலைப்போம் என் றும் கோவில்களை கைப்பற்றுவோம் என்றும் கூறி வருகின்றனர்.
அவ்வாறு நடந்தால் என்ன வாகும் என்பதற்கு சிதம்பரம் கோவில் சாட்சிய மாக உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ளது. தீட்சிதர்கள் தங்கள் பெண் பிள்ளைகளுக்கு குழந்தைத் திரு மணம் செய்து வைப்பது, கோவிலுக்கு வரும் பக்தர்களை தாக்குவது, கோவிலை திருமணம் போன்ற விசேஷங்களுக்கு வாடகை விடுவது, தேவாரம், திருவாசகம் போன்ற தமிழ்ப் பாயிரங் களை பாட அனுமதி மறுப்பது, கனகசபையின் மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதை தடை செய்வது என பல புகார்கள் உள்ளன.
இந்நிலையில் நீதிமன்றத்தின் அறிவுறுத்த லின்படி அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் 30க்கும் மேற்பட்ட விதி மீறல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் கூறியுள் ளார்.
இதுகுறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் ஆரூத்ரா தரிசனத்தை காரணம் காட்டி கனகசபையின் மீது ஏறி பக்தர்கள் தரி சனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது குறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருப்பதாக வும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேபோன்ற விதிமீறல்கள், சாதிய அடிப்படையிலான மேலாதிக்கம் போன்றவற்றை அனைத்து கோவில் களிலும் அரங்கேற வைப்பதுதான் பாஜகவின ரின் தீய நோக்கம். இதைத்தடுப்பது தமிழக மக்க ளின் குறிப்பாக இறை நம்பிக்கை உள்ளவர் களின் கடமையாகும்.