இந்திய அரசியலில் மீண்டும் முத்திரை பதிக்கும் வரலாற்றினைப் படைத்திருக்கிறது தியாகபூமி கண்ணூர். தேசமே உற்றுநோக்கிய மாநாட்டின் வாயிலாக தேசத்தைக் காப்பதற்கு அனைத்து இடதுசாரி, மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளும் ஒன்றுபடுவோம் என்ற அறை கூவலையும் விடுத்திருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்ணூர் மாநாடு.
ஏப்ரல் 6 முதல் 10 வரை கேரள மாநிலம் கண்ணூ ரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 23வது மாநாடு ஞாயி றன்று லட்சக்கணக்கான மக்கள் சங்கமித்த பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்துடன் நிறைவு பெற்றிருக்கிறது. இம்மாநாடு விடுத்துள்ள செய்தி ஒன்றுதான்: “அனைவரும் ஒன்றுபடுவோம்; பாஜகவை தனிமைப்படுத்தி வீழ்த்துவோம்”.
இந்த திசைவழியில் தனது அரசியல் தீர்மா னத்தை நிறைவேற்றியுள்ள கண்ணூர் மாநாடு, ஒரு பலம் வாய்ந்த கட்சியாக வளர்வதற்கும், இடது சாரி ஒற்றுமையை மேலும் பலப்படுத்துவதற்கும் அதன்மூலம் இந்திய அரசியலில் தொழிலாளர் - விவசாயிகள் வர்க்கத்தின் ஆட்சியை நிறுவு வதை நோக்கிய புரட்சிகரப் பயணத்தை மேலும் வலுவாக முன்னெடுத்துச் செல்வதற்கும் சூளுரை ஏற்றுள்ளது.
இந்த மாநாட்டில் அரங்கிற்கு உள்ளே நடந்த விவாதங்களைப் போலவே, அரங்கத்திற்கு வெளியே கருத்தரங்குகளில் நடந்த விவாதங் களும் இந்திய அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாக, ஏப்ரல் 9 அன்று நடை பெற்ற மத்திய- மாநில உறவுகள் குறித்த சிறப்புக் கருத்தரங்கம், நாடு முழுவதும் உள்ள மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுக்கு ஒரு மாபெரும் அறை கூவலை விடுத்திருக்கிறது. இக்கருத்தரங்கில் உரையாற்றிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மத்தியில் ஆளும் ஆர்எஸ்எஸ் - பாஜக தலைமையிலான ஆட்சிக்கும் அது அமலாக்கும் கொள்கைகளுக்கும் எதிராக ஒரு போர்ப்பிரகடனமே செய்திருக்கிறார்கள் என்றால் மிகையல்ல.
மாநில உரிமைகளைப் பறிக்கும் விதமாக ஒன்றிய ஆட்சியாளர்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக மேற்கொள்ளும் நட வடிக்கைகளை எதிர்ப்பதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல செயல்பட்டன; தொடர்ந்து செயல்படுவோம் என்று இரு முதல்வர்களும் சூளுரைத்திருப்பது, வெறும் பொதுக்கூட்டப் பேச்சு அல்ல. மாறாக, பிரிவு 356ஆல் இந்திய அரசியலில் கலைக்கப்பட்ட முதல் இரண்டு ஆட்சிகள் உண்டு என்று சொன்னால் அவை கேரளத்தில் இஎம்எஸ் ஆட்சியும் தமிழகத்தில் கலைஞர் ஆட்சியும் தான்; எனவே அந்த அடிப்படையில் மாநில உரிமைகளுக்காக குரல் கொடுக்கிற முன்னத்தி ஏர்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், திமுகவும்தான் இருக்க முடியும். நாடு முழுவதும் உள்ள மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை ஓரணியில் திரட்டவல்ல சக்திபடைத்தவை இவ்விரண்டு கட்சிகளும். அதை மிகச்சரியாக உணர்ந்து, கண்ணூர் மாநாட்டை தேசிய அரசிய லில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிற களமாக மாற்றியிருக்கிறது மார்க்சிஸ்ட் கட்சி. அந்தக் களத்தில் வெல்லப்போவது நிச்சயம்!