headlines

img

மறியல் போர் வெல்க!

தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை வன்மத்துடன் புறக்க ணித்து ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை  கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட்1  -இல் (இன்று) இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் மாபெரும் மறியல் போர் நடைபெறவுள்ளது. இந்த மறியல் போ ராட்டத்தில் அலைஅலையாய், அணிஅணி யாய் ஆர்ப்பரித்து அணிவகுப்பதன் மூலம் தமிழ்நாட்டையே மறியல் களமாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை வன்மத்துடன் புறக்க ணித்து ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை  கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட்1  -இல் (இன்று) இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் மாபெரும் மறியல் போர் நடைபெறவுள்ளது. இந்த மறியல் போ ராட்டத்தில் அலைஅலையாய், அணிஅணி யாய் ஆர்ப்பரித்து அணிவகுப்பதன் மூலம் தமிழ்நாட்டையே மறியல் களமாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து பல்வேறு முனைகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேசன் ஆகிய இடதுசாரிக் கட்சிகள் இணைந்து நடத்தும் இந்த மறியல் போர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். வலதுசாரி பிற் போக்காளர்களாகிய பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு பின்பற்றும் பொருளாதாரக் கொள் கைகளுக்கு மாற்று, இடதுசாரிகள் முன்வைக்கும் மாற்றுப் பொருளாதாரக் கொள்கையே என்பதை பாருக்குப் பறைசாற்றும் போராட்டமாக மறியல் போராட்டம் அமைந்துள்ளது.

தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேவையான இயற்கைப் பேரிடர் நிதியை வழங்க ஒன்றிய அரசு மறுக்கிறது. கேரளத்தில் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவும், அதனால் ஏற் பட்டுள்ள உயிரிழப்பும், பொருள் இழப்பும் நெஞ்சத்தை பதறச் செய்வதாக உள்ளது. இதனை தேசியப் பேரி டராக அறிவிக்க வேண்டுமென கேரள முதல்வர் பினராயி விஜயன் ஒன்றிய அரசை கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அதுகுறித்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. 

தமிழகத்தில் ஏற்பட்ட புயல், வெள்ளப் பாதிப் பையும் தேசியப் பேரிடராக அறிவிக்க மோடி அரசு மறுத்துவிட்டது. 

கோடிக்கணக்கான உழைக்கும் மக்களையும் ஏழை, எளிய, நடுத்தர மக்களையும் கசக்கிப் பிழிவ தாகவும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மட்டுமே சலுகை வழங்கக்கூடியதாகவும் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை மட்டுமல்ல, ஒட்டுமொத்த பொருளாதாரக் கொள்கையும் அமைந்துள்ளது.

வசதி படைத்தவர்களுக்கு செல்வ வரி விதிக்க வேண்டுமென்பதை ஏற்க மறுக்கும் மோடி அரசு, அனைவரையும் பாதிக்கும் ஜிஎஸ்டி வரி வலை யை மேலும் மேலும் விரித்துக் கொண்டே போகி றது. இருப்போருக்கும், இல்லாதவருக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்ற போதும் பெரும்பகுதி மக்களை வதைப்பதை மோடி அரசு மாற்றிக் கொள்ளவில்லை. மாநிலங்களுக்கு இடையே பாரபட்சம் அதிகரிக்கிறது. மோடி அரசு க்குப் புரியும் மொழி போராட்டம் ஒன்றே. இடது சாரிக்கட்சிகள் இணைந்து இசைக்கும் போர்ப் பரணி திசையெட்டும் பரவட்டும்.