headlines

img

போலிக்கண்ணீர்..!

ஒன்றிய அரசின் உயர் பதவிகளில் லேட்டரல்  என்ட்ரி என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் அடிவருடி களை நேரடியாக நியமிக்கும் அறிவிக்கையை ஒன்றிய அரசு ரத்து செய்திருக்கிறது. இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பின் கார ணமாக தற்காலிகமாக  பின்வாங்கியிருக்கிறது.  ஆனாலும் ஒன்றிய பணியாளர் துறை அமைச்சர் ஜிதேந்திரசிங், “உயர் பதவிகளில் நேரடி நியமன செயல்முறையிலும், சமத்துவம், சமூக நீதிக் கொள்கைகளுடன் , குறிப்பாக இட ஒதுக்கீட்டு விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதில் பிரதமர் உறுதியாக இருக்கிறார். அதன் காரண மாக நேரடி நியமன விளம்பரத்தை ரத்து செய்யக் கூறியிருப்பதாகத்” தெரிவித்திருக்கிறார்.

அப்படியென்றால், ஒன்றிய அமைச்சரவை யின் ஒப்புதலின்றி தன்னிச்சையாக மத்திய பணி யாளர் தேர்வாணையம் அறிவிப்பை வெளி யிட்டதா?  அல்லது ஆர்எஸ்எஸ்-இன் அறிவுறுத் தல்படி வெளியிடப்பட்டதா?  2018 இல் இருந்து இதுவரை 65 பேர் ஒன்றிய அரசின் உயர் பதவி களில்  நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அதில் எங்கே  சமூகநீதி, சமத்துவம், இட ஒதுக்கீடு இருக்கிறது? அப்போது பிரதமரின் உறுதி எங்கே சென்றது? ஏன் இப்போது கூட சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தலாமே! எதற்காகத் தயங்க வேண்டும்?

தற்போது ரத்து செய்யப்பட்ட நேரடி நியமன அறிவிப்பில் கூட முன் திட்டமிட்ட திணிப்பிற்கான சாட்சியங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இதுவரை  நேரடி நியமன முறையில் ஒன்றிய அரசின் பணிக ளில் இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று இருந்தது. ஆனால் இந்த முறை அது நீக்கப்பட்டி ருக்கிறது. இதற்கான பின்னணி என்ன?  கடந்த முறை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மரு மகன் பிரதீக் தோஷி  பிரதமரின் சிறப்புப் பணி அதி காரியாக இருந்தபோதுதானே, இணைச் செயரலாளர் பதவிக்கு நிகரான பதவியில் நேரடி நியமனம் செய்யப்பட்டார். 

இப்போது யாரை நியமிப்பதற்காக ஒன்றிய அரசுப் பணியில் இருப்பவர்கள் நிராகரிக்கப்பட்டி ருக்கிறார்கள்?  இதுவரை நியமனம் செய்யப் பட்ட 65 பேரில் 35 பேர் நேரடியாகத் தனியார் துறை யிலிருந்து வந்தவர்கள். அதில் ஒருவர்தான் செபி தலைவராக நியமனம் செய்யப்பட்ட மாதவி பூரி புச்.  அவரது  நியமனத்தின் பின்னணியை ஹிண் டன்பர்க் அறிக்கை வெட்டவெளிச்சமாக்கி யிருக்கிறது. 

ஒரு துறையின் இயக்குநராக நியமிக்கப்பட வேண்டும் என்றால், அத்துறையில் 13 ஆண்டுகள் அரசின் கண்காணிப்பின் கீழ் அரசுப் பணியாற்றி யிருக்க வேண்டும். துணைச் செயலாளர் பத விக்கு 18 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண் டும். இவர்கள் தவறு செய்யும் போது அரசிற்குப் பதில் சொல்லும் பொறுப்பு இருக்கிறது. ஆனால் தனியார் நிறுவனங்களிலிருந்து நேரடி நியமனம் மூலம் வருபவர்களுக்குப் பொறுப்பேற்பது யார்?  இந்த நேரடி நியமன முறையே அரசு - கார்ப்ப ரேட் கூட்டுக் களவாணித்தனத்திற்கு அடித்தளம் போடும் ஏற்பாடு. இதனை அடியோடு ஒழிக்க வேண்டும்.