headlines

img

வேரோடு செடியைப் பறித்து வெயிலில் வீசுவதா?

வேரோடு செடியைப் பறித்து வெயிலில் வீசுவதா?

‘விதியே, விதியே என் செய நினைத்தாய் எம் தமிழ்ச்சாதியை’ என்று விடுதலைப் போராட்டக் காலத்தில் புலம்பெயர் தமிழர்களின் கதியை நினைத்து கவிதையில் கண்ணீர் சிந்தினார் மகா கவி பாரதி. இன்றைக்கு சொந்த நாட்டின் தலைநக ரான தில்லியிலேயே தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னலை எண்ணி மனம் குமுறுகிறது.

தெற்கு தில்லியின் ஜங்புரா பகுதியில் மதராசி கேம்ப் என்ற பெயரில் கடந்த 150 ஆண்டுக ளுக்கும் மேலாக தமிழர்கள் குடியேறி வசித்து வரு கின்றனர். 700க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வாழ்ந்து வந்த இவர்கள் அனைவரும் ஏழை  எளிய மக்கள். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்க ளிலிருந்து பிழைப்புக்காக குடியேறியவர்கள்

தற்போது யமுனை நதியின் பிரதான மழைநீர் வடிகால் பகுதியை இவர்கள் ஆக்கிரமித்துள்ள தாகக் கூறி தில்லி உயர்நீதிமன்றம் இவர்களது வீடு களை இடித்து வெளியேற்ற உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தில்லி மாநில பாஜக அரசு காவல்துறையின் துணையோடு தமிழர் குடி யிருப்புகளை இடித்து தரைமட்டமாக்கியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தோழர் பிருந்தாகாரத் மற்றும் தில்லி மாநிலத் தலைவர்களும் தோழர்களும் மட்டுமே இந்த மக்க ளுக்கு ஆதரவாக நின்றுள்ளனர். தமிழர்களின் நலன் குறித்து வாய்கிழியப் பேசும் பாஜகவைச் சேர்ந்தவர்கள், இவர்களைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படவில்லை.

370க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில் 180 குடும்பங்களுக்கு மட்டுமே 40 கிலோ மீட்டருக்கு அப்பால் வீடுகள் ஒதுக்கப்பட்டுள் ளன. அந்த வீடுகளில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. மேலும் 150க்கும் மேற்பட்ட குடும்பங்க ளுக்கு எந்த மாற்று ஏற்பாடும் செய்யப்படவில்லை என்று இவர்களுக்காக போராடி வரும் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பெரும்பாலான குடும்பத்தைச் சேர்ந்தவர்க ளிடம் எந்தவிதமான ஆவணமும் இல்லை என்று கூறி மாற்று இடம் ஒதுக்கக்கூட மறுக்கிறது தில்லி மாநில பாஜக அரசு. மதராசி கேம்ப் பகுதியில் வசித்த அனைவரும் அன்றாடம் உழைத்து பிழைக் கும் எளிய மக்கள். வேரோடு செடியைப் பறித்து வெயிலில் வீசுவது போல இந்த குடும்பங்களின் வீடுகளை பறித்து விரட்டியடித்தால் அவர்கள் எங்கே செல்வார்கள்? வீட்டை நினைத்து கவலைப் படுவார்களா அல்லது பறிபோகும் வேலையை நினைத்து கண்ணீர் வடிப்பார்களா? 

இந்திய நாட்டின் கார்ப்பரேட் நிறுவனங்க ளும் பெரும் பணக்காரர்களும் செய்யும் ஆக்கிரமிப் புகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படுகிறது. ஆனால் ஏழை எளிய மக்கள் என்றால் புல்டோ சர்கள் கொண்டு அவர்களது வீடுகள் தகர்க்கப்படு கின்றன. குடியிருப்புகளையும், வாழ்க்கையையும் இழந்து தவிக்கும் மதராசி கேம்ப் மக்களுக்கு நியாயம் கிடைத்திட அனைத்துப் பகுதி மக்களும் குரல் கொடுக்க வேண்டும். தமிழக அரசு தேவை யான அனைத்து உதவிகளையும் செய்வதாக கூறி யுள்ளது. அதே நேரத்தில் தில்லி மாநில நிர்வாகத்தி டம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி, பாதிக் கப்பட்ட மக்களை பாதுகாக்க முன்வர வேண்டும்.