headlines

img

இதுவே இறுதி, அது உறுதி!

நான் மூன்றாவது முறையாக பிரதமர் ஆக வேண்டும் என விரும்புவது அதிகாரத்தை அனு பவிக்க அல்ல. நாட்டின் முன்னேற்றத்துக்கு பாடுபடவே என்று பிரதமர் நரேந்திர மோடி பாஜக தேசிய கவுன்சில்  கூட்டத்தில் பேசியிருக் கிறார். அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ஒவ்வொருவரின் வளர்ச்சிக்காக ஒவ்வொருவரின் நம்பிக்கையுடன் ஒருங்கி ணைந்து செயலாற்றுவோம் என்று கூறப்பட்டுள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசு அனைவரது வளர்ச்சிக்காகவும் செயல்பட வில்லை.

ஓரிருவர் - அதானி, அம்பானி போன் றோரின் - வளர்ச்சிக்காகவே பாடுபடுகிறது.  அதனை உலகப்பணக்காரர்களின் பட்டியலிலும் ஆசிய பணக்காரர்களின் பட்டியலிலும் அவர்கள் இடம் பெற்றிருப்பதிலிருந்தே புரிந்து கொள்ளலாம். கோடிக்கணக்கான பெண்கள், ஏழைகள், இளைஞர்களின் கனவுகளை நனவாக்குவதே எனது குறிக்கோள் என்று கூறியிருக்கும் மோடி  மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமலாக்கக் கூடாது என்பதற்காக  முடமான நிலையில் தானே கொண்டு வந்தார்.

  ஆண்டு க்கு 2 கோடிப் பேருக்கு வேலை வழங்கியிருந் தால் 20 கோடி இளைஞர்களின் கனவு நிறைவேறி யிருக்குமே! ஏழைகளை, புலம்பெயர் தொழி லாளர்களை அகதிகளைப் போல அலைய விட்டது தானே பாஜக ஆட்சியின் சாதனை!  சமூகத்தின் அனைத்துப் பிரிவினருடனும் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறும் மோடி, குடியுரிமை திருத்தச் சட்டம், பொது சிவில் சட்டம் ஆகியவற்றை கொண்டு வந்தது மதச்சிறுபான்மையினரையும், தலித், பழங்குடி மக்களையும் இந்துக்களில் பல பிரிவினரையும் பிரித்திடும் பாரபட்சம்தானே. அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்குத் தானே! ராமராஜ்யம் என்ற கருத்தியலே உண்மை யான ஜனநாயகம் என்று மகாத்மா காந்தி அடிக்கடி கூறுவார் என்று பாஜக தேசிய கவுன்சில் தீர்மானம் கூறுகிறது.

ஆனால் அவ ரது ராமராஜ்யம் முஸ்லிம், கிறிஸ்தவர், பௌத்தர், சமணர், பார்சிகள் என அனைவரும் சமமாக நட்புணர்வுடன் வாழ்வது அல்லவா? அதற்கு எதிரானது தானே பாஜக ஆட்சி. தனது வெற்றி உறுதியாகிவிட்டதால் தான் வெளிநாடுகள் வரும் ஜுலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தங்கள் நாடுகளுக்கு வரும்படி அழைப்பு விடுத்திருக்கின்றன என்று கூறுகிறார் மோடி.

அவர்களது அழைப்பு இந்திய நாட்டின் பிரதமருக்குத் தானே தவிர, தனிப்பட்ட மோடிக்கு அல்ல. 2002ஆம் ஆண்டில் மோடிக்கு பல நாடுகள் பாஸ்போர்ட் கூட வழங்க மறுத்தது மறந்து போய் விட்டதா? பாஜகவின் 10 ஆண்டு ஆட்சியால் நாட்டு க்கும் மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் அமை திக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையே நீடிக்கிறது. அதனால் இந்த ஆட்சி இனி வரவே கூடாது என்பது தான் நாட்டு மக்களின் முடிவு. அது வரும்  தேர்தலில் நடப்பது உறுதி. இதுவே பாஜக ஆட்சிக்கு இறுதி! தங்களை வதைக்க மக்கள் உங்களுக்கு வரம் தர மாட்டார்கள்!