பட்டியலினத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ, இஸ் லாமியர்களுக்கு ரங்கநாத் மிஸ்ரா ஆணைய பரிந் துரையின் அடிப்படையில் ஏன் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு உச்சநீதி மன்றம் எழுப்பியுள்ள தீர்ப்பு நியாயமானது.
கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களுக்கு மாறிய பட்டியலினத்தவர்க்கும் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கு நீதிபதி சஞ்சய் கிஷன் தலைமையிலான அமர்வில் விசாரணை க்கு வந்தது. ஒன்றிய அரசு தரப்பில் ரங்கநாத் மிஸ்ரா ஆணைய பரிந்துரையை அப்படியே ஏற்க முடியாது என்றும் கூடுதல் ஆய்வுகள் தேவைப் படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் பல்வேறு ஆணையங்களின் முடிவுகள் இடஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்துள்ள நிலையில், இதை ஏன் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று கேள்வி எழுப்பினார்.
மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வருவதில் ஒன்றிய அரசு அதீத ஆர்வம் காட்டுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒன்றிய அளவிலும் கொண்டு வரப்போவதாக அவ்வப்போது மிரட்டப்படுகிறது. ஆனால் பட்டியலினத்திலிருந்து மதம் மாறிய வர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது மத மாற் றத்தை ஊக்குவிக்கும் என ஒன்றிய அரசு கருது கிறது. பவுத்தம் மற்றும் சீக்கிய மதங்களுக்கு மாறிய பட்டியலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப் படுகிறது. ஆனால் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களுக்கு மாறிய பட்டியலினத்தவர்களுக்கு இந்த சலுகை மறுக்கப்படுகிறது.
சீக்கிய சமூகத்தினரின் கோரிக்கையை ஏற்று அந்த மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவர்களு க்கு 1956ஆம் ஆண்டு உரிய இடஒதுக்கீடு வழங்கப் பட்டது. 1990ஆம் ஆண்டில் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது பவுத்த மதத்திற்கு மாறியவர்களுக் கும் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு மாறிய பட்டியல் இனத்தவர்க்கு இடஒதுக்கீடு வழங்கலாமா என ஆய்வு செய்ய உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ் ணன் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப் பட்டது. ஆனாலும் இந்த விசயத்தில் ஒன்றிய அரசு தொடர்ந்து இழுத்தடித்து வருகிறது.
இஸ்லாமிய மதத்திற்கு மாறிய பட்டியலினத்த வர்க்கு இடஒதுக்கீடு கோருவதில் தயக்கம் இருந்த நிலையிலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் இந்த கோரிக்கையை அழுத்தமாக முன்வைத்து வருகின்றனர்.
இது தொடர்பான வழக்கு 2004 ஆம்ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ரங்க நாத் மிஸ்ரா இது குறித்து அளித்துள்ள பரிந்து ரையில் சமூகப் பாகுபாடு தொடர்கிறது என சுட்டிக்காட்டுகிறது. சச்சார் குழு அறிக்கையும் சமூகப் பாகுபாடு தொடர்வதை எடுத்துரைத் துள்ளது. இந்நிலையில் மதம் மாறியவர்களுக்கு பட்டியலினத்தவர்க்கான சலுகையை வழங்கு வதே நியாயமாக இருக்கும்.