பாலஸ்தீனத்தின் காசாப்பகுதி மீதான இஸ்ரே லின் கொடூரத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட வர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 70 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் நிவாரண முகாமுக்கு அருகில் உண வுக்காகக் காத்துக் கொண்டிருந்தவர்கள்.
மிகவும் குறுகலான நிலப்பரப்பைக் கொண்டுள்ள காசாவில், தாக்குதல்களைச் சமாளிக்க 15 லட்சம் மக்கள் தென் கோடியில் உள்ள ரஃபா நகருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அங்கும் தங்கள் தாக்குதல்களைத் தொடங்கப் போவதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள் ளது. இந்த நிலைமை மாறவில்லை என்றால், கொடிய பஞ்சம் ஏற்படுவதைத் தவிர்க்க முடி யாது என்று நிவாரணக்குழுவினர் எச்சரிக்கி றார்கள்.
நிவாரணப் பொருட்களோடு பயணிக்கும் வாகனங்கள் இஸ்ரேல் ராணுவத்தினரால் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது எகிப்தில் இருந்து ரஃபா நகரின் வழி யாகத்தான் நிவாரணப் பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்த நகரத்தின் மீது தாக்கு தல் நடத்தப்பட்டால் அது நிவாரணப் பணிக ளுக்கு சவப்பெட்டியில் அறையப்படும் கடைசி ஆணியாக அமைந்து விடும் என்று ஐ.நா. பொ துச் செயலாளர் குட்டெரஸ் குமுறியுள்ளார்.
அமெரிக்காவும், அதன் கூட்டாளிகளும் மேலும் ரத்த ஆறு ஓட வேண்டும் என்றே விரும்பு கின்றன. சிரியா, இராக் மற்றும் லெபனான் மீதும் தாக்குதல் நடத்த இஸ்ரேலைத் தூண்டி விடுகி றார்கள். மறுபுறத்தில், போர் நிறுத்தத்திற்காகக் கடுமையாக முயற்சிப்பதாக செய்திகளை வெளி யிட்டுக் கொள்கின்றனர். ஆனால், போர் நிறுத் தத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையில் மேற் கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் தடுக்கிறது அமெரிக்கா.
ரமலான் மாதம் மார்ச் 10 அல்லது 11 ஆம் தேதியில் தொடங்கவிருக்கிறது. அதற்கு முன்பா கப் போர் நிறுத்தம் வேண்டும் என்று மேற்கு ஆசியப்பகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தொடர விரும்பும் இஸ்ரேல், போர் நிறுத்த முயற்சி களுக்கு தடையாகவே இருந்து வருகிறது.
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு தொடக் கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வரும் இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சி, ஆக்கிரமிப்பி னால் ஜனநாயகம் இருக்காது. சமத்துவம் இல்லா மலும் ஜனநாயகம் இருக்க முடியாது என்று குறிப்பிட்டது. ராணுவ ரீதியாக தீர்வு காண முடியாது என்றும், அரசியல் தீர்வே நிரந்தரமா னதாக அமையும் என்றும் கூறியுள்ளது. பல்வேறு உலக நாடுகளும் வலியுறுத்தும் இந்த அணுகு முறையே தீர்வாக அமையும். இஸ்ரேல் அதை ஏற்க வேண்டும்.