மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு ஐந்து நாட்கள் சீனப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பு உட்பட 20 முக்கிய ஒப்பந்தங்களில் மாலத்தீவும், சீனாவும் கையெழுத்திட்டிருப்பதாக விபரங்கள் வந்துள் ளன. மாலத்தீவு ஜனாதிபதிக்கு 21 குண்டுகள் முழங்க, சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்துள் ளது சீன அரசு.
மாலத்தீவு, இந்தியப் பெருங்கடலில் அமைந் துள்ள ஒரு சின்னஞ்சிறிய நாடு. ஆனால் அதை ஒரு சிறிய நாடு தானே என்று கருதாமல், தனக்கு இணையான - ஓர் இறையாண்மை மிக்க நாடு என்ற மரியாதையை சீனா அளித்திருக்கிறது. இந்த இடத்தில்தான் சீனா வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது என்றால் மிகையல்ல.
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி லட்சத் தீவுக்கு பயணம் மேற்கொண்டார். அவரது பயணத்தை மாலத்தீவின் மூன்று அமைச்சர்கள் விமர்சித்தார்கள். அது முற்றிலும் கண்டிக் கத்தக்கது. இந்திய பிரதமர், இந்தியாவின் லட்சத்தீவிற்கு சென்றதை விமர்சிக்க வேறொரு நாடான மாலத்தீவின் அமைச்சர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இந்த பின்னணியில் அந்த மூவரையும் அந்நாட்டு ஜனாதிபதி, அமைச் சரவையிலிருந்து இடைநீக்கம் செய்தார். அந்த உடனடி நடவடிக்கை பாராட்டத்தக்கது.
அதேவேளையில், சமீப காலமாக இந்தியா வுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் கசப்பானதாக மாறி; மிக மிக நெருக்க மான அண்டை நாடான மாலத்தீவு இந்தியாவின் செல்வாக்கு வட்டத்திலிருந்து வெளியேறிச் செல்லும் அளவிற்குச் சென்றுள்ளது. இதற்கு முற்றிலும், மோடி தலைமையிலான அரசின் தெற்காசிய பிராந்தியத்திற்கு விரோதமான வெளியுறவுக் கொள்கையே காரணம்.
மாலத்தீவுகள், இலங்கை, பூடான், நேபாளம், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ் தான் ஆகிய மிக மிக நெருக்கமான அண்டை நாடுகளோடு, மோடி ஆட்சிக்கு வந்தபிறகு, கடந்த சில ஆண்டுகளாக நல்லுறவை விட கசப்புகளே அதிகரித்துள்ளன. இந்த நாடுகள் அனைத்திலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அமெரிக்கா மிகப் பெரிய அள விற்கு செல்வாக்கு செலுத்தியது. கடந்த ஓரிரு ஆண்டுகளில் அந்த செல்வாக்கு சற்று திசை மாறி, சீனாவை நோக்கித் திரும்பியுள்ளது. அதற்கு முக்கியமான காரணம், மிகவும் பின் தங்கியுள்ள, இந்த நாடுகளோடு, “பெல்ட் அண்டு ரோடு” எனப்படும் உலகளாவிய வர்த்தக சுற்றுப் பாதை திட்டத்துடன் சீனா வர்த்தக உறவை - அதன் மூலம் அந்த நாடுகளின் கட்டமைப்பு வச திக்கு உதவிகளை மேற்கொண்டிருப்பதுதான். இதில் இணையாத ஒரே தெற்காசிய நாடு இந்தியா மட்டுமே. அமெரிக்காவின் பங்காளியா கச் செயல்படும் இந்தியாவால் தங்களுக்கு பலன் இல்லை என்பதே அண்டை நாடுகள் விலகிச் செல்ல காரணம். நண்பர்களை இழந்துவிட்டு என்ன செய்யப் போகிறது இந்தியா?