பிரதமர் நரேந்திரமோடியின் நெருங்கிய கூட்டாளியான கவுதம் அதானி, பங்குச் சந்தை யிலும் புகுந்து தன்னுடைய திருவிளையாடலை நடத்தியிருப்பதை அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அம்பலப்படுத்தியுள்ளது.
அதானி தொடர்புடைய பல்வேறு மோசடி களை கடந்த ஆண்டு, ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளிக்கொணர்ந்தது. இதுகுறித்து நாடாளு மன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தின. ஆனால், அதானி மோசடி குறித்து நாடாளு மன்றத்தில் விவாதிக்க விடக் கூடாது என்பதற் காகவே ஆளுங்கட்சியான பாஜக, ரகளையில் ஈடு பட்டு நாடாளுமன்றத்தை முடக்கியது. இந்த மோசடி குறித்து, விசாரிக்க வேண்டுமென எதிர்க் கட்சி எம்.பி.க்கள், கையெழுத்திட்ட மனுவைக் கூட, அமலாக்கத்துறை இயக்குநரகம் வாங்க மறுத்தது.
இந்த மோசடி குறித்து செபி (பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம்) விசாரித்தால் போதும் என ஊற்றி மூடினார்கள். செபியும் இதுகுறித்து விசாரிப்பதாக படம் காட்டிக் கொண்டிருந்தது. இந்த நிலையில்தான், செபி அமைப்பில் முழு நேர உறுப்பினராக இருந்து கொண்டே, மாதவி பூரி புச் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ளார் என்ற அதிர்ச்சி தரும் உண்மையை ஹிண்டன் பர்க் அம்பலப்படுத்தியுள்ளது. மாதவி பூரி புச் செபியின் தலைவராக நியமிக்கப்பட்டபின், அவரது கணவர் பெயருக்கு அதானி நிறுவன பங்குகள் மாற்றப்பட்டுள்ளன.
இந்த தகவல் வெளியானவுடன், பங்குச் சந்தை யில் சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அதானி நிறுவன பங்குகள் சடசடவென சரிந்துள்ளன. அன்றாடங்காய்ச்சிகளான ஏழை மக்களை பாதுகாப்பதை விட அதானி, அம்பானி வகை யறாவை பாதுகாப்பதே தனது அவதார நோக்கம் எனக் கருதும் மோடி அரசும், ஆதரவு ஊதுகுழல் ஊடகங்களும் இந்தியப் பொருளாதாரத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுவிட்டதாக அலறுகின்றன.
அதிலும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி சங்கர் பிரசாத், ஹிண்டன்பர்க் நிறுவனம் சனிக் கிழமை இந்த தகவலை வெளியிட்டு திங்களன்று பங்குச் சந்தையை சரிவடைய செய்ய சதி நடந்துள் ளது என்றும், இதற்கு இந்தியா கூட்டணிக் கட்சி கள்தான் காரணம் என்றும் அபத்தமாக உளறியுள்ளார்.
அதானி, அம்பானி வகையறா மாட்டிக் கொள்ளும் போதெல்லாம் பாஜக தலைமையி லான ஒன்றிய அரசு அலறுவது வாடிக்கையான ஒன்றே. எல்ஐசி மற்றும் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளின் பணத்தை மோடி அரசு பங்குச் சந்தையில்தான் முதலீடு செய்கிறது. எனவே, இப் போது நடந்துள்ள மோசடி ஒவ்வொரு இந்திய குடி மகனையும் பாதிக்கும். எனவே அதானி சாம்ராஜ் ஜியத்தின் ஒட்டுமொத்த முறைகேடு, மோசடியை யும் நாடாளுமன்ற கூட்டுக் குழு மூலம் விசாரிக்க வேண்டும். செபியின் தலைவர் மாதவி பூரி புச் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். கார்ப்பரேட் முதலாளி கள் மற்றும் ஒன்றிய ஆட்சியாளர்களின் கூட்டுக் களவாணித்தனம் அதிகாலை வெளிச்சமென தெளிவாகத் தெரிகிறது.