headlines

img

அனுமதித்திடுக!

இலங்கையில் துன்புறும் சக மனிதர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்திட அனுமதிக்க வேண்டும். காலத்தே செய்தால்தான் அது உதவி என்பதைச் சரியாக சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. 

இலங்கை அரசு தமிழர்கள் மீது பாரபட்சம் காட்டும் நிலையிலும், தமிழர்கள் மட்டுமின்றி சிங் களர்களின்  துயரையும் சேர்த்துத் துடைக்கும் வகையில் தமிழக அரசு உதவிக்கரம் நீட்டுகிறது. ஆனால் ஒன்றிய மோடி அரசு எந்தவித மனிதா பிமானமுமின்றி உதவிகளைப் பெற்று அளித்திட மறுப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. முதல்வர் நேரில் வலியுறுத்தியும், நினைவூட்டல் கடிதம் எழு தியும் பதிலளிக்காமல் இருப்பது நயவஞ்சகத்தின் உச்சம். இனியும் தாமதிக்காமல், ரூ.123 கோடி மதிப் பிலான பால்பவுடர், அரிசி, மருந்து உள்ளிட்ட பொருட்களை உடனே இலங்கைக்கு அனுப்பிட  அனுமதித்திட வேண்டும்.  

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கு கோத்தபய ராஜபக்சே அரசு  பின்பற்றிய இனவாத மற்றும் தவறான பொருளாதாரக்  கொள்கையே காரணமாகும்.  1978 ல் அந்நாட்டின் அரசியல் சாசன 20 ஆவது திருத்தத்தின் மூலம்  ஜனாதி பதிக்கு அதிகார குவிப்பு மேலும் அதிகரிக்கப் பட்டது. அதனால் நீதிமன்றத்தால் கூட ஊழல் களை விசாரணைக்கு உட்படுத்தி தண்டனை வழங்க முடியவில்லை.  இதன் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக 35 பில்லியன் டாலர் சூறையா டப்பட்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

ஒன்றிய மோடி அரசைப் போன்றே, இலங்கை அரசும் முன் திட்டமிடல் இன்றி  எடுத்த பல நட வடிக்கைகள் மேலும் அந்நாட்டை  இடியாப்பச் சிக்கலில் தள்ளியிருக்கிறது. திடீரென அனை வரும்  இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும்  என்று கோத்தபய ராஜபக்சே அரசு உத்தர விட்டது. இதனால் விவசாயிகளின் வாழ்வு சீர ழிக்கப்பட்டதோடு, விவசாய உற்பத்தியும் 40 சத விகிதம் வீழ்ச்சியடைந்தது. கொரோனா நெருக்கடி யைச் சமாளிப்பதாகக் கூறி சமூகத்தில் வசதி படைத்த பிரிவினர் பயன்பெறும் வகையில் நேரடி வரியைக் குறைத்தது. இதனால் அரசின் வருவா யில் 22 சதவிகிதம் வீழ்ச்சியடைந்தது. 

ராஜபக்சே அரசைப் பதவி விலகக் கோரியும், 20 ஆவது அரசியல் சாசனத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் தன்னெழுச்சியாக மக்கள் வீதிகளைப் போராட்டக் களமாக மாற்றியிருக் கின்றனர். இலங்கை முழுவதும் தொழிற்சங்கங் கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெ டுக்கின்றன.  அதே நேரம் நிதிமூலதனமும், ஆளும் வர்க்கமும் தனது முகத்தை மாற்றிக்கொண்டு, சில சலுகைகளை அளித்து போராட்டத்தை முறி யடிக்க முயல்கின்றனர். 

இதற்கான செயல்திட்டத்தில் சர்வதேச நாணய நிதியமும் கைகோர்த்திருக்கிறது. இதனைப் புரிந்து கொண்டு கருத்தியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட தெளிவான  தலைமையை உருவாக்கி போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் முழு வெற்றி கிட்டும்.