headlines

img

தேவை, தாய்மொழியில் தேர்வு

2014இல் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த மோடி பின் அதை அப்படியே அம்போ என விட்டுவிட்டார்.

கடந்த 2022 ஜூன் மாதம் 22 அன்று பிரதமர் வேலைவாய்ப்புத் திட்டம் எனும் சிறப்புத் திட்டம் (மிஷன்) மோடியால் துவக்கி வைக்கப்பட்டது. அப்போது ஒன்றரை ஆண்டில் (18 மாதத்தில்)10 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று படாடோபமாக அறிவித்து 75 ஆயிரம் பேருக்கு நியமன கடிதம் கொடுக்கப்பட்டது. அப் போது 2023 மார்ச்சுக்குள் இந்த மிஷன் முடிந்தி டும் என்று அறிவிக்கப்பட்டது. மார்ச் முடிந்து விட்டது. அந்த மிஷன் முடிந்து விட்டதா? எத் தனை லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டது என்பது மோடிக்கே வெளிச்சம்.

இந்நிலையில் அக்னிபாதை திட்டம்- முப்ப டைகளில் 4 ஆண்டு ஒப்பந்தப்பணி- என குறைந்த ஊதியத்துடன் ஓய்வூதியம் இன்றி - அறிவிக்கப் பட்டது ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சரால், அதில் முதல் கட்டமாக இளைஞர்கள் தேர்வும் நடந்தது. ஆனால் எவ்வளவு பேர் பணியில் சேர்ந்தனர் என்பது அமைச்சருக்கே தெரியும். 

இப்போது உள்துறை அமைச்சகத்தின் கீழே செயல்படும் சிஆர்பிஎப் (மத்திய ரிசர்வ் காவல் படை) பணிக்கு 9,212 காவலர்களை தேர்வு செய்திட  எழுத்துத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தேர்வுகளை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் எழுத முடியும் என்று மத்திய தேர்வாணையம் அறிவித்துள்ளது. அப்படி யென்றால் பிற மொழிகள் பேசுபவர்களின் நிலைமை என்ன? இந்திய அரசமைப்புச் சட்டத் தின் எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ், மலையா ளம், தெலுங்கு, கன்னடம், அசாம், மணிப்புரி, உருது, மைதிலி, டோக்ரி உள்ளிட்ட 22 மொழி பேசுப வர்கள் தங்கள் தாய்மொழிகளில் தேர்வு எழுதிடும் வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?

இது மட்டுமின்றி மொத்தமுள்ள 100 மதிப்பெண் களில் 25 மதிப்பெண்கள் இந்தி புரிதலுக்காக என்று ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான இந்தி சார்பு நடவடிக்கை அல்லவா? இது தமி ழர்கள் உள்ளிட்ட பிற மொழிக்காரர்களுக்கு எதிரான, அவர்களை போட்டியிலிருந்தே கழித்துக் கட்டுகிற, வெளியேற்றுகிற துரோகச் செயல்பாடு அல்லவா?

தேர்வுகளை அவரவர் தாய்மொழியிலேயே எழுதச் செய்து தேர்வு செய்வதுதானே நியாயம். சிஆர்பிஎப் பணியில் இந்தி தெரியாத பிற மாநி லத்தவர் சேரக் கூடாதா? இந்தி பேசும் மாநிலத்த வர்க்கு மட்டும் இந்தப் பணி என்று சுருக்குவது இந்திய ஒருமைப்பாட்டுக்கும், சம வாய்ப்புரிமை க்கும் எதிரானது. தற்போதைய நிலையில் சமமற்ற போட்டியே மத்திய தேர்வாணையத்தின் அறி விப்பில் உள்ளது. எனவே தமிழ் உள்ளிட்ட அனைத்து தேசிய மொழிகளிலும் சிஆர்பிஎப் தேர்வு எழுதிட வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது ஒன்றிய அரசின் அரசியல் சட்ட கடமையாகும். அதற்காக உள்துறை அமைச்சகம் உடனடி யாக நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியமா கும். இதுவே வேலையின்றி விரக்தியிலும் வேதனையிலும் இருக்கும் இளைய சமுதா யத்திற்கு நம்பிக்கையளிப்பதாக அமைந்திடும்.