headlines

img

வீங்கும் பணம்!

பணவீக்கம் அதிகரிக்கிறது என்றால், விலை வாசி மேலும் மேலும் அதிகரிக்கிறது; மக்களை  கசக்கிப் பிழிகிறது என்று பொருள். இந்தியாவில் பணவீக்கம் அதிகரிக்கிறது என்பதை மோடி அரசு ஒப்புக்கொள்வதில்லை. பிரதமர் மோடியும் அவரது ஊதுகுழல்களும் இந்திய மக்கள் பாஜக ஆட்சியில் சுகமாக வாழ்கிறார்கள் என்றே இடைவிடாமல் கூறி வருகிறார்கள். ஆனால் உண்மை நிலை அப்படி இல்லை என்பது ஆட்சியாளர்களுக்கே தெரியும். 

இதை மேலும் உறுதிசெய்யும் விதமாக இந்தியா ரேட்டிங்கிஸ் & ரிசர்ச் நிறுவனம் புதிய விபரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்திய மக்களில் அடிமட்டத்தில் உள்ள - வரு மானம் குறைவான - ஏழைகளிலும், ஏழைகளாக உள்ளவர்கள் கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் மிக மிகக் கடுமையான விலைவாசி உயர்வை சந்தித்திருக்கிறார்கள் என  தெரிய வருகிறது. 7.2 சதவீதம் அளவிற்கு பண வீக்கம் கடும் தாக்குதலை நடத்தியிருக்கிறது. பொதுவாக ரிசர்வ் வங்கி, பணவீக்கம் விகிதம் 2 சதவீதம் என்ற அளவில்தான் உள்ளது என்று கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால் அடிமட்ட மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வுகள், அவர்கள் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் எந்த அளவிற்கு தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்பதை வெளிச்சத் திற்கு கொண்டு வந்துள்ளது. 

இதற்கு அடிப்படைக் காரணம் என்ன? “மோடி அரசு, பெட்ரோல்-டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மீது அளவில்லாத வரிகளை விதித்து, அதன் மூலம் அனைத்துப் பொருட்களின் விலைகளையும் சுழல் ஏணி மூலம் மிக வேகமாக ஏறுவது போன்று எகிறச் செய்துள்ளது” என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி. உடனடியாக மோடி அரசு, எரிபொருட்கள் மீதான செஸ் மற்றும் சர்சார்ஜ் உள்ளிட்ட வரிகளை முற்றாக நீக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான ஈவிரக்கமற்ற ஜிஎஸ்டி வரி, கிட்டத்தட்ட அனைத்து சிறு, குறு, நடுத்தர தொழில்களை முடக்கியுள்ளது. பொருட்களின் உற்பத்தி செலவு மேலும் மேலும் அதிகரித்து வரு கிறது. இவை அனைத்தும் பொருட்களின் விலையை பல மடங்கு உயர்த்துவதற்கு இட்டுச்  சென்றுள்ளது. அதேவேளை, பல கோடிக் கணக்கான தொழிலாளர்கள் - விவசாயிகள் கைகளில் பணப்புழக்கம் வெகுவாக வீழ்ந்துள்ளது. இதன் விளைவாக ஏழை, எளிய, நடுத்தர மக்களால் எந்தப் பொருட்களையும் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மற்றொரு புறத்தில் வங்கிகளின் கடன் வட்டி  விகிதங்கள் அதிகரிப்பு, இதன் தொடர் விளை வாக விலைவாசியில் ஏற்பட்டுள்ள தாக்கங் களும் கிட்டத்தட்ட அனைத்து உற்பத்திப் பொருட்களையும் எளிய மக்கள் வாங்க முடியாத இடத்திற்கு கொண்டு சென்றுள்ளன. இந்த உண்மைகளை மோடி அரசு ஒரு போதும் ஒப்புக்கொள்வது இல்லை. உடனடியாக மோடி அரசு எரிபொருள் மற்றும் உணவுப் பொருள் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.