தற்போது பருவ நிலை மாற்றமும் புவி வெப்பமயமாதலும் உலகுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. இந்தச் சூழலில் பழங்குடி யினத்தவரின் வாழும் முறை குறித்தும், வனப் பாதுகாப்பில் அவர்கள் உறுதி பூண்டுள்ளது குறித்தும் கற்றுக் கொள்ள வேண்டியது அவசி யமாகும் என்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ செவ்வாயன்று மத்தியப் பிரதேச மாநிலத் தில் நடைபெற்ற பழங்குடியினத்தவர் கௌரவ தின நிகழ்வில் கலந்து கொண்டு பேசியிருக் கிறார்.
அதுபோல பிரதமர் நரேந்திர மோடியும் தேசத் தின் எதிர்காலத்தை கட்டமைப்பதில் மகத்தான பழங்குடியின மரபிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். அதற்கான வாய்ப்பாக பழங்குடியினர் கௌரவ தினம் உள்ளது என்றும் பழங்குடியின மக்களை புகழ்ந்திருக்கிறார்.
ஆனால் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் நடவடிக்கைகளோ பழங்குடியின மக்க ளின் வாழ்க்கையையும் வனத்தையும் பாது காப்பதாக அமைந்திடவில்லை என்பதையே உணர்த்துகின்றன. வனங்களை பாதுகாக்கப் போகிறோம் என்ற பெயரில் பழங்குடி மக்களை யும், மலைவாழ் மக்களையும் வனத்தை விட்டு வெளியேற்றும் முயற்சியிலேயே தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் முன்முயற்சியால் கொண்டு வரப்பட்ட வன உரிமைகள் சட்டம் -2006 ன்படி பழங்குடி மக்களுக்கு அவர்களின் கைவசமுள்ள, அனுபவத்தில் உள்ள நிலங்களுக்கு பட்டா வழங்கி உரிமையளித்து அவர்களின் வாழ்வாதா ரத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் பெரும் பாலும் நடக்கவில்லையென்றே கூறலாம்.
இந்த நிலையில்தான் வனவிலங்கு சரணாலயம், பறவைகள் சரணாலயம் அமைத்தல் என்ற பெயரிலும் சுரங்கங்கள் செயல்படுத்துதல் என்ற பெயரிலும் பழங்குடி மக்களை வனத்திலிருந்து வெளியேற்றுவ தையே நோக்கமாகக் கொண்டிருக்கிறது பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு. ஆனால் இந்த அரசு கொண்டு வந்த திட்டங்கள் பழங்குடி மக்கள் மேம்பாட்டுக்கு முக்கிய பங்காற்றி வருகிறது என்று கூறுவது முர ணில்லையா?
உண்மையில் வனப்பகுதிகளில் சுரங்கங்கள் அமைப்பதற்காக பெரும் பகுதி வன நிலம் கார்ப்ப ரேட் பெரு நிறுவன முதலாளிகளுக்கே வழங்கப் படுகின்றன. தமிழகத்தின் ஈஷா மையம் போன்றவற்றுக்காக சட்டத்தை வளைத்து சுற்றுச்சூழல் அனுமதி பெற விலக்களிப்பதை இவரது அரசு தானே செய்கிறது. ஆயினும் தனது அரசால் பிர்சா முண்டா உள்ளிட்ட பழங்குடியின மக்களின் தலைவர்களின் கனவை நனவாக்கும் பாதையில் தேசம் பயணிக்கிறது என்று கூசாமல் கூறுகிறார் மோடி. எப்போது தான் ஒன்றிய ஆட்சியாளர்கள் உண்மையைப் பேசுவார்களோ? பழங்குடியினரிடம் வனப் பாது காப்பை கற்றுக் கொள்வார்களோ?