இந்தியாவில் 2018ஆம் ஆண்டில் முஸ்லிம் கள் மாட்டிறைச்சிக்காக பசுக்களை வர்த்தகம் செய்ததாகவும் கொன்றதாகவும் வதந்திகள் பரவின. அந்தச் சூழலில் இந்தியாவில் முஸ்லிம்கள் மீது இந்து தீவிரவாதக் குழுக்களின் கும்பல் தாக்குதல் தொடர்ந்து நிகழ்ந்தது என்று அமெரிக்க வெளியுற வுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ அறிக்கை யொன்றில் கூறியிருந்தார். 2018 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மதச் சுதந்தி ரம் குறித்த அறிக்கையொன்றை அமெரிக்க வெளி யுறவு அமைச்சகம் ஜூன் 21 அன்று வெளியிட்டது. உலக நாடுகளில் நிலவும் மதச் சுதந்திரத்தின் மீதான மதிப்பீடு என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது. இந்த அறிக்கை இந்தியாவின் உரிமைகளில் தலையிடுவதாகும் என்று வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் மறுப்பு அறிக்கை ஒன்றை மறுநாள் வெளியிட்டார். அதில் அரசமைப்புச் சட்டம் மூலம் பாதுகாக் கப்பட்டுள்ள இந்திய குடிமக்களின் உரிமைகள் குறித்துப் பேச வெளிநாட்டு அரசுகளுக்கோ அமைப்புகளுக்கோ சட்டப்பூர்வ அதிகாரம் கிடையாது என்று கூறியிருக்கிறார்.
சட்டப்பூர்வ அதிகாரம் கிடையாது என்பது உண்மைதான். ஆனால் இந்த மறுப்பு அறிக்கை யை வெளியிட்டிருக்கும் வெளியுறவு செய்தித் தொ டர்பாளர், தங்கள் நாட்டில் பாம்பியோ குறிப் பிட்டது போல சம்பவம் ஏதும் நடக்கவில்லை என்று மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை என்பதே இன்றைய மத்திய பாஜக ஆட்சியில் நடைபெறும் கும்பல் தாக்குதல்கள் குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்தும். ரவீஷ்குமார் தனது அறிக்கையில், இந்தியா வின் சகிப்புத்தன்மை மற்றும் அனைவர் மீதான அரவணைப்பு மூலம் பன்முக சமூகத்தை தன்ன கத்தே கொண்டிருப்பதாக பெருமை கொள்கிறது என்று கூறியிருக்கிறார். அத்தகைய சகிப்புத் தன்மையை பாஜக ஆளும் மாநிலங்களில் மருந்துக்குக்கூட காண முடியவில்லை என்பது தான் எதார்த்தநிலை.
பாஜக ஆளும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜூன் 17ஆம் தேதி முஸ்லிம் இளைஞரை விளக்குக் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்து ஜெய் ஸ்ரீராம் என்றும் ஜெய் ஸ்ரீஹனுமான் என்றும் சொல்லுமாறு ஒரு கும்பல் கட்டாயப்படுத்தியுள்ளது. விடிய விடிய அடித்துத் துவைத்து விட்டு காலையில் காவல்துறையிடம் மயங்கிய நிலையில் ஒப்ப டைத்ததாகவும் மருத்துவமனையில் சேர்த்ததும் இறந்துவிட்டதாகவும் செய்தி வெளியானது. இதுதான் இன்றைய இந்தியாவின் சிறுபான்மை மக்கள் உரிமைகள் ‘பாதுகாக்கப்படும்’ நிலையாகும். இதே ஜார்க்கண்ட் மாநிலத்தில் மட்டும் பாஜக ஆட்சியில் குறைந்தது 12 பேர் இந்து தீவிரவாத கும்பல்களால் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார் கள் என்கிற புள்ளி விவரம் ஆட்சியாளர்களுக்கு அதிர்ச்சியைத் தராது. ஏனெனில் அவர்கள் கும்பல் கொலைகாரர்களை மாலை மரியாதையுடன் வரவேற்பார்கள் என்பதற்கு மத்திய அமைச்சர் ஜெய்ந்த் சின்ஹா எடுத்துக்காட்டாக விளங்குகிறார். எனவே அமெரிக்காவின் அறிக்கை ஒரு மிரட்டல் போன்றது என்றாலும் அதில் கூறப்பட்டுள்ள அம்சத்தை மறுக்க மத்திய ஆட்சியாளர்களுக்கு தார்மீக உரிமை இல்லை.