போதையை ஊட்டுவதற் கல்ல - நல்ல
பாதையைக் காட்டுவதற்கே.....
இசை இசை இசை! - இசை
மனிதத்தை மனிதர் நெஞ்சில்
ஒட்டிவைக்கும் பசை பசை பசை!
எந்த....மிருகமேனும்
வசனமாகக் கத்திய துண்டா?
இசை ஒலி எழுப்பி டாத
பறவை உண்டா சொல்லுக நண்பா?
(போதையை)
இப்போது இசை எப்படி இருக்கு?- அது
மிருக உணர்வை ஊட்டு தென்று
மிருகங்களை அவமதிப்பவன் கிறுக்கு!
ரவுடித்தனத்தை தனிமனிதரின்
வில்லத்தனத்தை ரசிக்க வைக்குது
திரை இசை - அது
பெரும்பாலும் குறை இசை! - அது
கடைவிரிப்பது பெண் தசை.
வெறி தர அல்ல அன்பு
நெறிதர வேண்டும் நமக்கு
இசை இசை இசை இசை!
விஷம் தரும் என்றால் அது
இசையல்லஅல்ல கொடிய
வசை வசை வசை வசை!
(போதையை)
ஓசையுடன் பிறக்குது மழலை.- வானில்
ஆசையுடன் மோதுது கேள்
கருங்குழிக்குள் பிரபஞ்ச இசையை!
ஓசை அன்றோ இன்பம்? வெறும்
கூச்சல் கொடிய துன்பம்; அது
வெறித்தனம் - புவி
வாழ்வே ஒரு கீர்த்தனம்! -இதை
இசையால் உயர் வாக்கணும்!
இடிகளை அடுக்கி எழுப்பும்
இசைக் கோபுரம் தான் புரட்சியின்
இசை இசை இசை இசை!
இனிவரும் புவியினை இசை
செலுத்துக வைகறை வரும்
திசை திசை திசை திசை!
(போதையை)