headlines

img

ஆளுநர் அலுவலகம் சட்டத்திற்கு அப்பாற்பட்டதல்ல

ஆளுநர் அலுவலகம்  சட்டத்திற்கு அப்பாற்பட்டதல்ல

கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் அலுவலகத்தில் பாரத மாதாவின் உருவப்படம் வைக்கப்பட்டிருப்பது தொடர்பான பிரச்சனையில், மத சின்னங்களை அரசு அலுவல கத்தில் வைக்க அனுமதியில்லை என்று அறி விக்கை செய்து, முதலமைச்சர் பினராயி விஜயன், ராஜ்பவனுக்கு அனுப்பிய கடிதம் இந்திய அரசிய லமைப்பின் அடிப்படைக் கொள்கைகளை வலியுறுத்தும் முக்கியமான நடவடிக்கையாகும். 

இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பின்மை என்பது வெறும் காகிதத்தில் எழுதப்பட்ட வார்த் தைகள் அல்ல. அது நம் தேசத்தின் அடித்தள மாக விளங்கும் அடிப்படைக் கொள்கையாகும். ஆளுநர் அலுவலகம் உட்பட அனைத்து அரசு நிறுவனங்களும் இந்தக் கொள்கையை கண்டிப் பாக பின்பற்ற வேண்டும்.

ஆளுநர் அலுவலகத்தில் மத அல்லது அரசி யல் சின்னங்களை வைப்பது வெறும் அலங்கார விஷயம் அல்ல. அது அரசியலமைப்பு மதிப்புகளு க்கு எதிரான நேரடி சவாலாகும். ‘பாரத மாதா’ என்ற உருவகம் ஒரு குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தத்து டன் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அதை அரசு கட்டடங்களில் வைப்பது மதச்சார்பின்மைக் கொள்கையை மீறுவதாகும்.

ஆளுநர் என்பவர் ஒரு மாநிலத்தின் அரசியல மைப்பு தலைவர். அவர் அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். அவரது அலு வலகம் எந்தவொரு குறிப்பிட்ட மத அல்லது அரசி யல் சிந்தனையையும் பிரதிபலிக்கக் கூடாது. அர்லேகர் போன்ற ஆளுநர்கள் தங்களை அரசிய லமைப்பு நிர்ணயித்த எல்லைகளுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த நடவடிக்கையின் பின்னணியில் ஒன்றிய பாஜக அரசின் நிர்ப்பந்தம் தெளிவாகத் தெரிகிறது. ஆளுநர்களை அரசியல் கருவிகளாகப் பயன் படுத்தும் போக்கு ஆபத்தான முன்னுதாரணமாக அமைகிறது. இது கூட்டாட்சி கொள்கையையும், ஜனநாயக மதிப்புகளையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

கேரளத்தின் மதச்சார்பற்ற பாரம்பரியம் பல நூற்றாண்டுகள் பழமையானது. பல்வேறு மதங்க ளையும் கலாச்சாரங்களையும் அரவணைத்து வளர்ந்த இந்த மண்ணில் மதவாத சின்னங்களை திணிக்கும் முயற்சி ஏற்றுக்கொள்ள முடியாதது என்ற முதலமைச்சரின் எதிர்ப்பு கேரள மக்க ளின் மனசாட்சியின் குரலாகும்.

அரசியலமைப்பின் 200-வது பிரிவின் படி, ஆளுநர் தனது அலுவலகத்தில் எந்தவொரு மத அல்லது அரசியல் சின்னத்தையும் வைக்கக் கூடாது. ஆனால் கேரள ஆளுநரின் வெளிப்படை யான மீறல் குறித்து ஒன்றிய அரசு மௌனம் காப் பது அரசியலமைப்பு மீதான அதன் அலட்சி யத்தை வெளிப்படுத்துகிறது.

ஆளுநர் அலுவலகம் எந்த நிலையிலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டதல்ல. அரசியலமைப்பு மதிப்புகளை நிலைநாட்டுவதில் மாநில அரசுக ளுக்கு முழு உரிமை உண்டு. எனவே, கேளர முதல் வரின் அறிவிக்கையை ஏற்று, ஆளுநர் அலு வலகத்தில் இருந்து அனைத்து மதவாத சின்னங்க ளையும் அகற்ற வேண்டும்.