தாக்குதலை நிறுத்துக!
பாலஸ்தீன மக்கள் மீதான கொடூரத் தாக்குத லைத் தொடர்ந்து ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தொடுத்துள்ள போரின் காரணமாக மேற்காசிய பகுதி முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் ஈரானின் அணு ஆயுத உற்பத்தி நிலை யங்களை தாக்கி அழிப்பதாகக் கூறிக் கொண்டு தொடுத்த தாக்குதலால் விஞ்ஞானிகள் உள்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் தலைநகர் உட்பட பல்வேறு இடங்களில் ஈரான் தாக்குதல் தொடுத் துள்ளது. இது ஒரு பெரும் போருக்கு இட்டுச் செல்லும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் அடாவடித்தனம் அனைத்தின் பின்னணியிலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் உள்ளது. ஆனால் இந்தத் தாக்குதலுக்கும் தங்க ளுக்கும் தொடர்பு இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பம்மாத்து செய்கி றார். ஆனால் ஈரான் மீது தாக்குதல் தொடுப்பது குறித்து அமெரிக்காவிற்கு தகவல் தெரிவித்த தாக இஸ்ரேல் ஒப்புக் கொள்கிறது. இந்த இரு நாட்டு அரசுகளும் கூட்டுச்சேர்ந்து கொண்டு அடாவடி செய்வதன் மூலம் இந்த பிராந்தியம் முழு வதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற நீண்டநாள் திட்டத்தை நிறை வேற்ற முயல்கின்றனர்.
பாலஸ்தீன மக்களின் துயரம் தொடர் கதை யாக உள்ளது. கல்வி நிலையங்கள், மருத்துவ மனைகள், அரசு அலுவலகங்கள் என அனைத் தையும் இஸ்ரேல் ராணுவம் தாக்கி அழிக்கிறது. பட்டினியால் பாலஸ்தீன குழந்தைகளும், பொது மக்களும் செத்து விழுவது இந்த நூற்றாண்டின் பேரவலமாக மாறியுள்ளது. இந்தத் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று உலகின் பல்வேறு பகுதி களில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், தனது தாக்குதலை அமெரிக்காவின் துணை யோடு விரிவுபடுத்தியுள்ளது.
ஈரானிய எண்ணெய் வயல்கள் மற்றும் எரிவாயு சேமிப்பு நிலையங்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் தொடுப்பதால் சர்வதேச அளவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது இந்தியா உட்பட அனைத்து நாடுகளையும் பாதிக்கும்.
நெடு நாளாக நீடித்து வரும் பாலஸ்தீன மக்க ளுக்கு எதிரான இஸ்ரேலின் இனவெறி தாக்கு தலை தடுத்து நிறுத்த ஐ.நா. சபை தவறிவிட்டது. இப்போது இஸ்ரேல், ஈரான் மோதலிலும் கூட ஐ.நா. வெறும் பார்வையாளராகவே செயல்படு கிறது. இது உலகின் அமைதிக்கு பெரும் அச் சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
வளர்ச்சியின்மை காரணமாக உலக மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். வறுமை, வேலையின்மை அதிகரித்துள்ளது. ஆனால் ஏகாதிபத்திய மற்றும் இனவெறி அரசுகளின் போர்வெறியால் உலக மக்கள் அனைவரும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா வின் துணையோடு இஸ்ரேலின், போர்வெறி நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் குரல் கொடுக்க வேண்டும். இந்தப் பூவுலகை அழிக்க யாருக்கும் உரிமையில்லை.