பதினொன்றும் செய்யும்!
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமை யிலான கூட்டணி ஆட்சியை பாஜக சதித்திட்டம் தீட்டிக் கவிழ்த்து, தனது குதிரை பேரத்தால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கைப்பாவை அரசை வெற்றி பெற வைத்திருக்கிறது. இதுஅப்பட்டமான அரசியல் அநாகரீகம். பணத்தைக் கொண்டு ஜனநாயகத்தைச் சிதைக்கும் அயோக்கியத்தனம். இது இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கும் தார்மீக தோல்வி.
தேர்தல்களில் மக்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவர்கள் ஆட்சி அமைக்கிக்கின்றனர். ஆனால் பாசிச வெறி கொண்ட பாஜக அதனை ஏற்க மறுக்கிறது. இது இந்திய ஜனநாயகத்திற்கே மிகப்பெரிய ஆபத்தாக முடியும்.
கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் 11 அரசு களைக் கவிழ்த்து, மிகக்கேவலமாகக் குறுக்கு வழியில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறது. 2016ல் அருணாசலப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில், வெறும் 11 தொகுதிகளில் மட்டும் வென்ற பாஜக, அப்பட்டமாகக் குறுக்குவழியில் ஆட்சியைக் கைப்பற்றியது. பாஜகவை நம்பி களம் இறங்கிய கலிகோபுல் தற்கொலை செய்து கொண்டதுதான் மிச்சம்.
2017ல் மணிப்பூர் மற்றும் கோவாவில் அதிக இடங்களைப் பிடித்த காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களை குதிரை பேரத்தில் வீழ்த்தி விலைக்கு வாங்கியதுடன், பல சிறுகட்சி எம்எல்ஏக்களையும் பேரம்
பேசி ஆட்சியைக் கைப்பற்றியது. 2017ல் பீகாரிலும் இது போன்ற தில்லுமுல்லு வேலையில் ஈடுபட்டே பாஜக ஆட்சி அமைத்தது.
2018ல் மேகாலயாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் பாஜக வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
ஆனாலும் குறுக்குவழியில் ஆட்சி அதிகாரத்தை பாஜக கைப்பற்றியது. அதே ஆண்டு ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தைச் சட்டவிரோதமாகக் கலைத்து ஆளுநர் மூலம் ஆட்சி அதிகாரத்தைக்
கைப்பற்றியது. 2019ல் சிக்கிமில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட பாஜகவை மக்கள் ஏற்கவில்லை. பாஜக அதிகார வெறி கொண்டு சிக்கிம் ஜனநாயக முன்னணியின் எம்எல்ஏக்
களை விலைக்கு வாங்கி, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவுடன் இணைந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. இதே மோசடி வேலைகளால் 2019 ல் கர்நாடகாவிலும், 2020ல் மத்தியப்பிரதேசத்தி
லும் ஆட்சியை பாஜக பிடித்தது. 2021ல் புதுச்சேரியில் மக்கள் பாஜகவை நிராகரித்த நிலையில் ஆளுநரால் நியமிக்கப்பட்ட பாஜக எம்எல்ஏக்களை கொண்டும் ரங்கசாமியை
மிரட்டி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.
இப்படி மக்களின் விருப்பத்திற்கு மாறாகவே 11 முறை மாநிலங்களில் பாஜக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறது. பாஜகவால் எம்எம்ஏக்
களை விலைக்கு வாங்க முடியும். மக்களின் எதிர்ப்பையும், உணர்வுகளையும் ஒரு போதும் விலைக்கு வாங்க முடியாது. அந்த எதிர்ப்பு ஒருநாள் பாஜக
வின் ஒட்டுமொத்த ஆட்சி அதிகாரத்தையும் தூக்கி எரியும்.