headlines

img

ஹிட்லர் பாதையும், ‘இந்திய’ பாதையும்

பாசிச ஹிட்லர் மேற்கொண்ட அதே இன அழிப்பு வேலையைத்தான் ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரம் செய்து வருகிறது. மக்களை மதரீதியாக வும், இனரீதியாகவும் பிரித்து மிகப் பெரிய மனித குல படுகொலையை அரங்கேற்றியது ஹிட்லர் அரசு. அதே போல இந்தியாவில் உள்ள இஸ்லா மிய, கிறிஸ்துவ, பட்டியலின, பழங்குடி மக்களை பிரித்து ஒழிக்க முயல்கிறது ஆர்எஸ்எஸ் - பாஜக கூட்டம்.

மணிப்பூர் மாநிலத்தில் பாஜக மாநில அரசே சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை மக்களிடையே வெறுப்பை வளர்த்தது. இதன் விளைவாக அந்த மாநிலம் கலவர பூமியாக  மாற்றப்பட்டது. இப்போது மணிப்பூரிலிருந்து வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மணிப்பூர் தலைநகரான இம்பாலில் நியூ லாம்புலேன் பகுதி யில் கடைசியாக இருந்த பத்து பழங்குடியின குடும்பங்களும் அங்கிருந்து அகற்றப்பட் டுள்ளன.

அவர்களது பாதுகாப்புக்காகவே இந்த நட வடிக்கை என்று மாநில அரசு கூறியபோதும், தங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி யுள்ளதாக குக்கி பழங்குடி மக்கள் கூறுகின்ற னர். தலைநகரிலிருந்து ஒட்டு மொத்தமாக சிறு பான்மை, பழங்குடி மக்கள் வெளியேற்றப்பட்டு விட்டனர். இதன் மூலம் தெளிவான பிரி வினையை பாஜக அரசு உருவாக்கியுள்ளது. 

இனரீதியாகவும், மதரீதியாகவும் இவ்வாறு மக்களை தனிமைப்படுத்துவது, வெளியேற்று வது என்பதெல்லாம் இந்தியா இதுவரை பின் பற்றி வந்துள்ள நல்லிணக்கத்திற்கு எதிரான போக்காகும். 

இந்த நிலையில், ‘இந்தியா’ கூட்டணி வெறுப் பையும், விஷத்தையும் கக்குவதாக பாஜக தலை வர் ஜெ.பி.நட்டா கூறியுள்ளது வெட்கக்கேடா னது. விஷத்திற்கும், வெறுப்பு அரசியலுக்கும் மொத்த குத்தகைதாரர்களே இவர்கள்தான். 

தங்களுடைய பொருளாதாரக் கொள்கை களால் இந்திய மக்கள் அனைவரையும் நட்டாற் றில் விட்டவர்கள் இவர்கள். கார்ப்பரேட் முதலா ளிகளுக்கு சேவகம் செய்ய ஏழை, எளிய, நடுத்தர மக்களை ஒட்டச் சுரண்டுபவர்கள் இவர்கள். இதை மறைக்க வெறுப்பு அரசியலை அன்றா டம் விதைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இந்த லட்சணத்தில் ஜி20 மாநாட்டையொட்டி பேட்டியளித்த பிரதமர் மோடி, கடந்த ஒன்ப தாண்டு கால ஆட்சியில் இந்தியப் பொருளாதா ரம் வளர்ச்சியடைந்துவிட்டதாகக் கூறியுள்ளார். இவர் ஒரு சில கார்ப்பரேட் முதலாளிகளை மட்டுமே இந்தியா என்று கருதிக் கொண்டி ருக்கிறார் போலிருக்கிறது. நாட்டின் பொருளா தாரத்தை அதல பாதாளத்தில் தள்ளிவிட்டு அதை வளர்ச்சி என்று கூசாமல் கூறுகிறார் பிரதமர். பாஜகவை ஆட்சியதிகாரத்திலிருந்து அகற்றினால் மட்டுமே நாட்டைப் பாதுகாக்க முடியும்.