headlines

img

மாநில உரிமையை நிலை நாட்டும் மகத்தான சட்டம்

தமிழ்நாட்டில் பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்டப் பேரவையில் மசோதா நிறை வேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இத்த கைய சட்டம் இயற்றப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே கூறியிருந்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இத்தகைய சட்டத்தின் தேவையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது, எதிர்க்கட்சிகளான அதிமுகவும், பாஜகவும் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளன.

ஆளுநர்கள் வழியாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு இடையூறு செய்வ தோடு மட்டுமின்றி, போட்டி அரசாங்கம் நடத்த முயலும் பாஜக வெளிநடப்பு செய்வதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதிமுக மாநில உரி மைகள் தொடர்புடைய ஒரு சட்டத்தை ஆத ரிக்காமல் பாஜகவின் வழியை பின்பற்றுவது வேடிக்கையானது.

குஜராத், கர்நாடகம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் இத்தகைய சட்டங்கள் ஏற்கெ னவே உள்ளன. தெலுங்கானா, ஆந்திராவிலும் மாநில அரசின் பரிந்துரைகளின் பேரிலேயே துணை வேந்தர்கள் நியமிக்கப்படுகின்றனர். எனவே தாங்கள் ஆளும் குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு ஒரு நீதி, தமிழகத்திற்கு வேறு நீதி என பாஜக எடுக்கும் நிலைப்பாடு கேலிக்கூத்தானது.

மாநில அரசை கலந்தாலோசிக்காமல் ஆளுநர், துணைவேந்தர்கள் நியமனத்தில் தன்னிச் சையாக நடந்து கொள்வதாகவும் இது மக்க ளாட்சி தத்துவத்திற்கு எதிரானது என முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

முந்தைய அதிமுக ஆட்சியின் போது,  அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்த ராக சூரப்பா என்பவரை அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்  நியமித்தார். மாநில அரசின் கருத்துக்கு மாறாக, அண்ணா பல்கலைக் கழகத்தை ஒன்றிய அரசுக்கு தாரை வார்க்க அவர் ஒப்புக் கொண்டதோடு ஊழல் புகாரிலும் சிக்கினார்.

இப்போதுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கையை தமிழ கத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்து தன்னிச் சையாக துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்து கிறார். மாநில அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் இதில் பங்கேற்கவில்லை என்பது மட்டுமல்ல, தமிழகத்திற்கென்று தனிக் கல்விக் கொள்கையை உருவாக்க மாநில அரசு குழு ஒன்றை நியமித்துள்ளது. 

நீட் தேர்விலிருந்து விலக்கு உள்ளிட்ட பல்வேறு கல்வித்துறை சார்ந்த பிரச்சனைகளில்  மாநில அரசின் கருத்தோட்டத்திற்கு எதிராகவே இப்போதைய தமிழக ஆளுநர் நடந்து கொள்கி றார். நியமிக்கப்பட்ட ஒருவர் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசை விட அதிகாரம் கொண்ட வர் அல்ல. துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் நடத்தும் அதே நாளில் தமிழக அரசு துணை வேந்தர் நியமனம் தொடர் பாக சட்டம் நிறைவேற்றியிருப்பது மாநில அரசு களின் சுயாட்சியை நிலை நிறுத்துவதற்கான நட வடிக்கையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.